18 ஏப்ரல் 2017

வன நாயகன்




நான் சுதாவுக்காகப் பேசி, ஃபிரியா ரிட்டன் டிக்கெட்டும், ஒரு மாதச் சம்பளமும் தரச் சொல்லியிருக்கேன். ஊருக்குப் போற வரைக்கும், கெஸ்ட் ஹவுஸ்ல்லயே தங்கிக்கட்டும் பிரச்சினையில்ல.

     அவங்களுக்கு வேற பிரஷர்.

     நான் பேசாட்டி, அதுவும் குடுத்துருக்க மாட்டானுங்க.


    அடுத்த கேள்விக்கு இடமில்லாதபடி,

     இரண்டாவது இங்கேயே, இன்னொரு பேங்க் மெர்ஜர் ப்ராஜெக்ட் வருது. அதனால மத்த எல்லாருக்கும், இன்னமும் ஒரு வருட, எக்ஸ்டென்சன் வாங்கிரலாம்பா.

      அதன்பின் யாரும் எதுவும் பேசவில்லை.

      தங்களின் வேலைக்கு உத்தரவாதமிருக்கிறது, பிரச்சனையில்லை என்பது தெரிந்ததும், அவர்கள் ஆசவாசமாகி நிம்மதியாக உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

       சம்பத்துக்கு எந்த செய்தியை முன், பின் சொல்ல வேண்டும் என்னும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது.

       இங்கே யாரும் யாருக்காகவும் கொடி பிடிக்கப் போவதில்லை.


வன நாயகன்

     கதையினை எப்படித் தொடங்குவது என்பதும், எப்படி பக்கம் பக்கமாய் நகர்த்திச் செல்வது என்பதும், நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

      தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், கரை சேர்க்க வேண்டும், பொருளாதாரச் சூறாவளியில் சிக்கி அல்லலுறும், தன் குடும்பத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, குடும்பத்தையே பிரிந்து, உற்றார் உறவினர், நட்பு என அனைத்தையும் துறந்து, வெளிநாடு சென்று, திக்குத் தெரியாத கான்கிரீட் காடுகளில் நுழைந்து, போராடும் நாயகன்தான், வன நாயகன்.

      Today is the last day, for you, here

     ஒரே வரியில், ஒரே வார்த்தையில், நாயகனின் பணி பறிபோகிறது.

      சுதாங்கன்

       கதையின் நாயகன்.

       பணி பறிபோன, அந்த நொடியில் இருந்து கதை வேகம் பெறுகிறது.

       கதைக்கான களம்,

       ம லே சி யா

       கதை நகர, நகர, மலேசியா முழுவதும், நம்மையும் கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார்.

       பத்துமலை முருகன் கோவில், இரட்டை கோபுரம், மிருகக் காட்சி சாலை, கெடா என்றழைக்கப்படும், இராஜேந்திர சோழன் வெற்றிக் கொடி நாட்டிய கடாரம், என கதையின் போக்கிலேயே, மலேசிய வரலாற்றையும், பக்குவமாய் இணைத்து, விருந்து வைக்கிறார்.

      சார், இப்ப முன்ன மாதிரி வேலையில்லா திண்டாட்டம் கிடையாது. திறமையில்லா திண்டாட்டம்தான்.

      போகிற போக்கில், இன்றைய இளைஞர்களின் பெருங் குறையினையும், பட்டென்று போட்டு உடைக்கிறார்.

      வன நாயகன்

      304 பக்கங்கள்

       பக்கத்துக்குப் பக்கம் கதை வேகம் பெற்று ஓடுகிறது.

       இந்த நூலின் பின்புறம், மறைந்திருக்கும், நண்பரின் உழைப்பை நினைத்துப் பார்க்கிறேன்.

       நிச்சயமாக, ஓராண்டிற்கும் மேல் உழைத்திருக்க வேண்டும்.

       இதே நினைவாய் உழன்றிருக்க வேண்டும்

       பல நேரங்களில், குடும்பத்தை மறந்தும், தரவுகள் தேடி அலைந்திருக்க வேண்டும்.

        மனைவியும், மகள்களும், இவரை அனுமதித்திருக்கிறார்கள்.

        இதற்காகவேனும், இவர்தம் குடும்பத்தினரைப் பாராட்டியே ஆக வேண்டும்.


ஆரூர் பாஸ்கர்

      துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம், பதற்றம் என மனதில் தோன்றிய ஏதோ ஒன்றை எழுதி முடித்தபின், எனக்குள் ஒரு பெரிய நிம்மதி.

       ஆசுவாசம், ஆனந்தம்.

       அதையும் தாண்டி, அகமனத்தின் எல்லா அடுக்குகளிலும் போராட்டம் அடங்கிய, அமைதியான ஒரு ஆழ்ந்த ஜென் மன நிலை.

       அது வெயில் புழுங்கும் வீட்டின் ஜன்னல்களை திறந்தால் வீசும், குளிர்ந்த வெளிக் காற்றின் சுகம் போல.

      சிலர் சொல்வது போல, பணத்துக்காக, புகழுக்காக எழுதலாம்தான். ஆனால் அது பசியில்லாமல் உண்ணும் விருந்து போல, ருசியிருப்பதில்லை.

         அதே சமயத்தில், ஒரு படைப்பாளி, தன் படைப்புகளை, இந்த சமூகத்தின் முன் வைத்து, அதற்கான, நியாயமான அங்கீகாரத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறான்.

        நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

       நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் இந்த வார்த்தைகள், ஒவ்வொரு எழுத்தாளரின், உள்ளக்கிடக்கையினையும் பிரதிபலிக்கிறது அல்லவா.

வன நாயகன்

முழு நிலவு முகம் நாட்டும் நாளொன்றில்,
இருபுறமும், வாசமிகு மலர்கள் மலர்ந்து,
நறுமணம் வீசும்,
நீண்ட நெடிய பாதையில்,
நட்போடு, தோளில் கை போட்டு,
மெல்ல நடந்தவாரே,
இதமாய், பதமாய், நயமாய்,
கதை கேட்கும் ஒரு உணர்வினைத் தருகிறார்,

ஆரூர் பாஸ்கர்

வாழ்த்துக்கள் நண்பரே.
---------
வன நாயகன்
கிழக்குப் பதிப்பக வெளியீடு
ரூ. 275.-
      


       

27 கருத்துகள்:

  1. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் விமர்சனம் அருமை
    படிக்கத் தூண்டுகிறது...
    நாவலாசிரியர்க்கு வாழ்த்துகள்.
    -மும்பை சரவணன்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் !

    தங்களின் பார்வையில் வனநாயகன் எப்படி இருக்கிறதோ அதைவிட சிறப்பாகச் சிந்திக்க எவராலும் முடியாது அருமை அருமை

    தம +1

    பதிலளிநீக்கு
  4. அறிமுகத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையாக நூல் அறிமுகம்
    செய்துள்ளீர்கள்
    இதுவரைப் படித்ததில்லை
    அவசியம் வாங்கிப் படித்துவிடுவேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. சிறந்த அறிமுகம் நண்பரே/சகோ! மிக்க நன்றி அறிமுகத்திற்கு. வாழ்த்துகள்! நாவலாசிரியருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. நல்ல அறிமுகம், வாங்கிப்படிப்பேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நல்லதோர் அறிமுகம். வனத்தின் பின்னணியில் கதை என்றால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.

    தம +1

    பதிலளிநீக்கு
  9. இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  10. தங்களின் விமர்சனம் நூலின் சிறப்புக்குக் கட்டியம் கூறுகின்றது..

    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  11. அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. அறிமுகம் மிக அருமை நண்பரே வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. கடல் கடந்து தமிழர்களின் வாசிப்பும் விமர்சனமும் விரிவது ஆரோக்கியமானது

    பதிலளிநீக்கு
  14. கடல் கடந்து தமிழர்களின் வாசிப்பும் விமர்சனமும் விரிவது ஆரோக்கியமானது

    பதிலளிநீக்கு
  15. கதைக் களத்தைப் பார்த்தால் ,உண்மை கலந்த கற்பனைக் கதைப் போல இருக்கே :)

    பதிலளிநீக்கு
  16. ஆரூர் பாசுகரின் வனநாயகன் புதினம் பற்றிய இரத்தினச் சுருக்கமான நூல் அறிமுகம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருப்பதில் இருந்தே நூலின் தரத்தை உணரமுடிகிறது. மிகுந்த உழைப்பைச் செலுத்தி இந்நாவலை எழுதியிருக்கிறார் ஆரூர் பாஸ்கர் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  18. நல்ல ஒரு அறிமுகம் சென்னை வரும் போது வாங்கிக்கொள்கின்றேன்.பகிர்வு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  19. நூலுக்குள் உள்நுழைந்து
    நல்லதோர் அறிமுகம் காண
    சிறந்த பதிவைத் தந்தீர்கள்!

    பதிலளிநீக்கு
  20. வனநாயகனை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு
    நன்றிகள் பல.

    எனது முதல் கதையான "பங்களா கொட்டா" கிராமத்துக் கதை. "வனநாயகன்" அதற்கு நேர் எதிரான மலேசியக் கதைக்களன். அந்த வகையில் இந்தப் புதினத்தின் வழியாக நான் செய்த சோதனை முயற்சியில் தேர்ச்சி பெற்றதாகவே நினைக்கிறேன். வாசித்தவர்கள் எல்லோரும் தவறாமல் கேட்பது , "இது எனது சொந்தக்கதையா ? " இந்தக் கேள்விக்கு இப்படி பதில் சொல்லலாம் என நினைக்கிறேன்.


    எனது சூழ்நிலையை, எனக்கு நேர்ந்தவற்றை, எனது அனுபவத்தை ஒரு புனைவாக எழுதுவது எனக்கு இயல்பாக வருகிறது. அப்படி எழுதுவதில் சந்தோசமும் ஒரு ஆத்ம திருப்தியும் கூட இருக்கிறது. அதை அப்படியே தொடருவதே சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

    இதுபோன்ற புனைவுகளில் எழுதவும் பகிரவும் இன்னும் பல விசயங்கள் இருக்கின்றன. அதை எழுதுவதற்கான மனநிலை அமையவேண்டும். மற்றவை தானாக நடந்துவிடும் என நம்புகிறேன்.


    உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றிகள்.

    புத்தகம் தேவைப்படுபவர்களுக்கு;

    order online;
    https://www.nhm.in/shop/9788184936773.html [https://www.nhm.in/shop/9788184936773.html/&h=atoqvxtlbxbc8gibsc4jrmwx9gn3frndkjckyr9xkxmdhwb8kzx-ogjrknbqk4-mudclr5cgi06aqbquyytfrn6oe24npeg5uzkk9zwexy6c9tsfi6hzhmtvzmqbbvgf8t2r3kwwsctbesibcq&enc=azozzmy_zykttxvfm_covbr12nxsbbx-lhw-gml29xhe1lmbf6s1ibfymltv6c9vm3wjco-ehuprmhan5hrd6sjmd2ztza5vuz-iltrxzoetqxpguadrctl1ia8gmzgclxbq04gdnnsyt5frlszfcnn_m7tmoblbogfilhd8wmz3d0tfbjv5p1wgsfd0abybafrisitwu2qlfzh0nftgbpva&s=1_green]

    Now available in Kindle;
    https://www.amazon.in/dp/B06X9VTR71… [https://www.amazon.in/dp/b06x9vtr71%3f_encoding%3dutf8%26keywords%3dvananayagan%26qid%3d1487947428%26ref_%3dsr_1_1%26s%3ddigital-text%26sr%3d1-1&h=atnmod01zmfgfzqqqyfi0ia-enpdc1ld05930i8av2qcdx9gg_n-ziamfqzyeubf5ssu8rmmjaoxg_dxc2qz4jdftjch8toybq3xliezklslce8k4sj12mqyfuatxxybae74nnqw2k6ovysexg&enc=azonvnvhynnxxxjog4nk2nnuevtq6xmryqgavqmwzt2rtclcofeijkolwmj2gux19l13f45v0vicloi34yrjace6wbyk7vp9b4x-heu6ez_sb2uwxvmg3lzq9qbt7fpxcphp0a4ayzsxxtqe0ygkc8niy_ial1fxte1_wtgqkxcbrtwxrx8fqktjn7jqsbsm_d3_d6zi3tn7ku7k98a1qd80&s=1_green]

    பதிலளிநீக்கு
  21. பங்களகொட்டாவிற்கு அடுத்த நூல்,
    நல்ல நூல் விமர்சனம்,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, திரு.ஆரூர் பாஸ்கர் அவர்களின் வனநாயகன் என்ற புதினத்தின் அறிமுகம் அருமை. படைப்பாளருக்கும் பதிவிட்டவருக்கும் என் இதய பூர்வமான வாழத்துகள்.

    பதிலளிநீக்கு

  23. Eniya vaalthukal both of you...
    Tamil manam - 8
    https://kovaikkavi.wordpress.com/
    (ஈஸ்டர் விடுமுறை பிள்ளைகள்பேரர் வீடு நிறைய .
    யாருக்குமே கருத்திட முடியவில்லை.
    மெல்ல மெல்ல கருத்திடுவேன்)

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு