நாளும் பொழுதும்
தமிழ்தான் தமிழரின்
முகவரியென்று உரைப்பவர்.
உறவுக்கும் நட்புக்கும்
உப்பாகக் கரைபவர்.
நிலவாகச் சிரித்தாலும்
நித்திலமாய் ஜொலித்தாலும்
சந்தணமாய் கமழ்ந்தாலும் – கைகுலுக்கித்
தென்றலாய் தவழ்ந்தாலும்
முதுகு சொரிவதை
முகமன் கூறுவதை தவிர்ப்பவர்.
முன்னுக்குப் பின்
முரணாக நடப்போரை வெறுப்பவர்.
அதிகாரத்தால் அந்தஸ்தால்
அவலம் நிகழ்ந்தால் துடிப்பவர்.
அவ்வப்பொழுது
பாட்டெழுதி பட்டாசாய் வெடிப்பவர்.
பட்டாசாய் வெடித்ததனால், முகமண் கூறுவோரை வெறுத்ததனால்,
முரணாக நடப்போரைத் தவிர்த்ததனால், இவரைச் சிலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நேரெதிரில்
கண்டு
கைகுலுக்கி
வாழ்த்தும்
வாய்ப்பிருந்தும்
விரைந்து
கடப்பதைப்போல்
விலகி
நடக்கிறான்
அன்பிற்
சிறந்த
ஆறறிவு
நண்பன்.
ஆறறிவு என்றாலே, ஆறாவது அறிவு சிலருக்கு, அழுக்காறாய்
அமைந்து விடுகிறது. அழுக்காறை வெற்றி கண்ட, ஒப்பற்ற வீரராய் இருப்பதாலேயே, இவரைச் சிலர்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
வந்தார்கள்
அமர்ந்தார்கள்
தேநீர் அருந்தினார்கள்.
இல்லாததையெல்லாம்
சேர்த்தும்
கோர்த்தும்
அவனை ஏராளம் புகழ்ந்து
புல்லரிக்க வைத்தார்கள்.
…………………………………………….
……………………………………………
விடைபெறும் முன்
இன்னொரு முறை
உச்சத்திற்குப்
புகழ்ந்து வைத்தார்கள்.
அவனைக் கடந்தவுடன்
அவர்கள்
ஒருவரை ஒருவர் பார்த்து
அவர்களுக்குள்
சிரித்துக் கொண்டார்கள்.
அவர்களை நினைத்து
அவனும்
சிரித்துக் கொண்டான்.
நாவினிக்கப் பேசினாலும், உதடுகளைத்
தாராளமாய்த் திறந்து, ஏராளமாய்ச் சிரித்தாலும், அகத்தின் உண்மை நிலையினை உணர்ந்ததாலேயே,
இவரைச் சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அகற்ற
அகற்ற
குவிகின்றன
குப்பைகள்.
வெட்ட
வெட்ட
மண்டுகின்றன
களைகள்.
கழுவக்
கழுவ
படிகின்றன
அழுக்குகள்.
துடைக்கத்
துடைக்க
படர்கின்றன
ஒட்டடைகள்.
வடிக்க
வடிக்க
நிலைக்கின்றன
கசடுகள்.
ஆயினும்
சற்றுமுன்தான்
அறிவித்தனர்
ஞானிகள்
பட்டியலில்
என்னையும்.
குப்பைகளையே தோரணங்களாய், களைகளையே
வளர்ச்சியாய், அழுக்குகளையே வர்ணங்களாய், போற்றி வாழ்வோருக்கு இடையில், இவற்றை எல்லாம்
களைந்ததனால், ஞானியானவர் இவர். ஞானியானதாலேயே இவரைச் சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
மகள் சம்பாத்தியத்தில்
தள்ளாடிக் கொண்டிருக்கும்
அப்பன்களுக்கு.
மனைவி சம்பாத்தியத்தில்
வீதியில் அலையும்
வெட்டி பந்தா புருசன்களுக்கு
எண்பது வயதுத் தந்தை
உழைத்து வாங்கிய
பைக்கில்
ஊர் சுற்றும்
தறுதலை மகன்களுக்கு
வழங்கலாம்
இவ்வாண்டின்
உழைப்பாளர் தின
விருதுகள்.
இவ்வாறு, உண்மைகளை ஏடெடுத்து எழுதுவதாலேயே,
உரக்கச் சொல்லி முழங்குவதாலேயே, இவரைச் சிலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
மனுக்களை
வாசித்து
கண்ணீரால்
நிரம்பித்
ததும்புகின்றன
குப்பைத்
தொட்டிகள்
---------------
உச்சி
வெய்யிலில்
வேகத்
தடைகளுக்கருகில்
வெள்ளரிப்
பிஞ்சும் கொய்யாவும்
விற்றுக்
கொண்டிருக்கும்
பெண்களின்
வியர்வைத்
துளிகளுக்குள்
விழுந்து
கிடக்கிறார்கள்
குடிகாரக்
கணவன்கள்.
……………………………….
தேர்வுகளின்
கடைசிநாள்
கொண்டாட்டத்தில்
சட்டைகளில்
இங்க்
அடித்துக் கொண்டிருந்தவர்கள்
இப்போது
சந்துகளில்
பீர்
அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய வாழ்வியல் அவலங்களை, சிறிதும்
தயக்கமின்றி, எழுத்தாக்கி, முரசறைந்து, கண்டனக் குரல் எழுப்புவதாலேயே, இவரைச் சிலர்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நண்பர்களே, இவர் யார் தெரியுமா?
அதையும் அவரே கூறுகிறார், செவி கொடுத்துக் கேளுங்கள்.
நான்
காலமெனும்
பெருங்கடலில்
ஓரிறகு.
சுழற்
காற்றடித்துத்
தவித்தாலும்
தனியழகு.
சுடும்
பாலைவன
நெடுமணலில்
நான் வசிப்பேன்.
கவி
படைப்பதனால்
வாழ்க்கையினை
நான் ஜெயிப்பேன்.
வாழ்க்கையில் வென்று விட்டதனால்தான், அவர்கள்,
இவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
பார்வை
மங்கலாத்
தேரியுதேப்பா
என்றார்.
அறுவை
சிகிச்சைக்குப் பிறகு
இவ்வளவு
வெளிச்சமானதா
இவ்வுலகம்
என்றார்.
இப்பொழுது
மங்கலாய்த்
தெரிகிறதெனக்கு
அம்மா
இல்லா
இவ்வுலகு.
அம்மாவுக்கு.
என்றுரைத்து,
தன் நூலைத், தன் அன்பு அம்மாவிற்குப் படையலாய், படைத்திட்ட, தங்க மகனைத்தான் , சிலர்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
யார்
தேடுகிறார்கள்?
மனிதர்கள்
அல்ல
இவரைத்
தேவதைகள்
தேடுகின்றன.
என்ன,
என்ன, தேவதைகளா
ஆம்
இவர்
தேவதைகளால்
தேடப்படுபவர்.
இவரை
எப்படி அழைக்கலாம்?
கவிஞர்
பேச்சாளர்
எழுத்தாளர்
கல்வியாளர்
மனித
நேயர்
என எப்படி
வேண்டுமானாலும் அழைக்கலாம்.
இவர்
அத்தனைக்கும் உரியவர், உன்னதமானவர்
மொத்தத்தில்
தங்கம்
சொக்கத்
தங்கம்
புதுகை
ஈன்றெடுத்த
கவியருவி
கவியருவி
அருமையான விரிவான விமர்சனம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குத.ம
இப்படியெல்லாம் கவிதைகள் எழுதினால்
பதிலளிநீக்குதேடாமல் வேறன்ன செய்வார்கள் தேவதைகள்!..
வணக்கம்.
பதிலளிநீக்குஉங்கள் பாணியில் ஓர் புத்தக அறிமுகம்.
அருமை.
தொடர்கிறேன்.
கவிஞர் தங்கம் மூர்த்தி மாறுபட்டக் கோணத்தில் சிந்திப்பவர். அவருக்கு வாழ்த்துகள். உங்களுக்குப் பராட்டுகள்.
பதிலளிநீக்குகவிஞர் அறிமுகம் நல்லா இருக்கு. (முகமண் - முகமன்)
பதிலளிநீக்குதிருத்தம் செய்துவிட்டேன் நண்பரே
நீக்குநன்றி
அருமை
பதிலளிநீக்குநல்ல அறிமுகம்.
பதிலளிநீக்குகணினிக்கு வந்ததும் தம வாங்கிட்டு விட்டேன்!
நீக்குநல்ல பதிவு.தங்கம் மூர்த்தி அவர்களை புதுக்கோட்டை
பதிலளிநீக்குவலைப்பூ விழாவில் சந்தித்தது மகிழ்வான நினைவு.
சட்டைகளில்
பதிலளிநீக்குஇங்க் அடித்துக் கொண்டிருந்தவர்கள்
இப்போது
அப்போது அவர்களே ஏப்ரல் ஃபூல் ஆகிப் போனது உண்மை !
கவிஞர் தங்கம் மூர்த்தி சொன்னவிதம் அருமை :)
நலல்தொரு புத்தக அறிமுகம். வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஆகா..அருமை
பதிலளிநீக்குஹா ஹா ஹா முடிவில் இருப்பவரையா.. மேலே பக்கம் பக்கமா மாத்தி மாத்திப் போட்டிருக்கிறீங்க.. அனைத்தும் அருமை... உண்மை.
பதிலளிநீக்குதேடப்படுபவர் பற்றித் தேடித்தேடிச் சேர்த்த உங்கள் வார்த்தைமாலைகள் கவிஞரின்புகழுக்கு மேலும் மணம் சேர்க்கின்றன.
பதிலளிநீக்குநல்லதோர் அறிமுகம். நன்றி ஐயா.
பதிலளிநீக்குஅசாத்தியமான திறமை உடையவர் எனபதை புதுக்கோட்டை பதிவர் திருவிழாவில் அறிய முடிந்தது
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு.கவிஞரை அறிமுகம் செய்ததில் உங்களுக்கு நிகர் தாங்களே.எழுச்சி கவிஞர் இன்னும் பல படைப்புகளை படைத்து வாழ்க பல்லாண்டு.நன்றி.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஉங்களால் அடையாளம் காட்டப் படுகிறவர் உண்மையிலேயே தேடப்படுபவராக இருக்க வேண்டும்
பதிலளிநீக்குதங்கம் மூர்த்தி நல்ல கவிஞர் என்று சொன்னால் தவறு. மிக மிக நல்ல கவிஞர் என்பதே ஓரளவு சரியாக இருக்கும்.
பதிலளிநீக்கு-இறைய செல்லப்பா நியூஜெர்சி
கண்ணோட்டம் அருமை
பதிலளிநீக்குஎடுத்துக்காட்டுக்கு
தொடுத்துக்கொடுத்த
கவிவரிகள் அருமை!
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் வரிகள்
அவரது நூலைத் தேடிப் படி என்கிறதே!
கவிஞரை அறிவேன்.அண்மையில் புதுக்கோட்டைக்கு விக்கிபீடியா தொடர்பான கலந்துரையாடலுக்குச் சென்றிருந்தபோது அவரைப் பற்றிய விவரங்களை அங்கேயே திரட்டி, அவரை அப்பொழுதே புகைப்படம் எடுத்து விக்கிபீடியாவில் அவரைப் பற்றிய பக்கத்தை ஆரம்பித்தேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அவரைப் பற்றிய தங்களின் பதிவு வழக்கமான பாணியில் அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக அழகிய விமர்சனம்!
பதிலளிநீக்குகவிஞருக்கு இனிய வாழ்த்துக்கள்!
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
தங்கம் ஐயாபற்றியும் அவரது நூல் பற்றியும் சொல்லிய விதம் சிறப்பு... தாங்கள் சொல்லிய அத்தனை அம்சமும் நிறைந்தவர்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்களின் பாசத்திற்குரிய கவிஞர்.
பதிலளிநீக்குமிக அழகான விமர்சனம்
எங்களின் பாசத்திற்குரிய கவிஞர்.
பதிலளிநீக்குமிக அழகான விமர்சனம்
நல்லதொரு அறிமுகம். புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிலே அவரது மொழி நடை கண்டு வியந்தேன்.
பதிலளிநீக்குஅருமை.
தங்கம் அவர்களை
பதிலளிநீக்குஅவர்களது ஜொலிக்கும் கவிதைகள் மூலமே
அறிமுகப்படுத்திய விதம் அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமையான விமரிசனம்...
பதிலளிநீக்குஅருமையான கவிதைகள், அருமையான விமர்சனம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். கவிஞருக்கு.
நல்ல உரைகல்லில் உரைத்து மாற்றுப் பார்த்து இருக்கிறீர்கள் தங்கத்தை.
பதிலளிநீக்குசிறப்பான அறிமுகம்
பதிலளிநீக்குஅருமையிலும் அருமை ஐயா!
பதிலளிநீக்குவணக்கம் !
பதிலளிநீக்குஅருமையான அறிமுகம் உண்மையில் அவர் தேவதைகளால் தேடப்படுபவர்தான் அப்பப்பா நாகரிக உலகை நயம்பட எழுதி இருக்கிறார் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள் !
தம +1
அருமை விமர்சனம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களிற்கும் வாழ்த்துகள்.
https://kovaikkavi.wordpress.com/