ஆண்டு
1982.
ஹைதராபாத்.
மூத்த விஞ்ஞானி அவர்.
அரசால் ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியபடியே
பணியாற்றி வந்தார்.
தினமும் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு,
பணி நடைபெறும் தளத்திற்குச் செல்வார்.
மாலையிலோ அல்லது இரவிலோ மீண்டும் விடுதிக்குத்
திரும்புவார்..
இவரது பயணத்திற்காக, மகிழ்வுந்து ஒன்றினையும்,
ஓட்டுநர் ஒருவரையும், அரசு வழங்கியிருந்தது.
மூத்த விஞ்ஞானி அல்லவா.
---
கதிரேசன்.
பத்தொன்பது வயதில், இராணுவத்தில்
சிப்பாய் ஆகச் சேர்ந்தார்.
இராணுவத்தில் இணைந்த அடுத்த ஆண்டே திருமணம்.
ஒரு மகன், ஒரு மகள்.
அளவான மகிழ்வான குடும்பம்.
ஒரு நாள், புதிதாய் ஒரு உத்தரவு வந்தது.
பணி மாறுதல் உத்தரவு.
மகிழ்வுந்து ஓட்டுநராய் உடனே பணியில் சேர வேண்டும்.
மூத்த விஞ்ஞானிக்கு மகிழ்வுந்து ஓட்டுநர் ஆனார்.
வேலை மிகவும் குறைவு
ஓய்வோ மிக மிக அதிகம்.
செய்தித் தாட்களைப் படிப்பது, கிடைக்கும் புத்தகங்களைப்
படிப்பது என்று பகல் பொழுதை, ஓய்வு நேரத்தை, மெதுவாய் நகர்த்திக் கொண்டிருந்தார்.
ஒரு நாள், காலைப் பயணத்தின் போது, விஞ்ஞானி
கேட்டார்.
கதிரேசன், என்ன படித்திருக்கிறீர்கள்?
பத்தாம் வகுப்பபில் தோல்வி அடைந்தவன் ஐயா நான்.
அதுவும் ஆங்கிலத்தில் மட்டும்,
பதில் சொல்வதற்குள், சற்று கூனிக்
குறுகித்தான் போய்விட்டார்.
ஒரு பாடம்தானே, ஆங்கிலப் பாடத்தில்
எளிதாய் வெற்றி பெற்றுவிடலாம், படியுங்களேன் என்றார்.
மகிழ்வுந்து வேகமாய் விரைந்து கொண்டிருந்தாலும்,
கதிரேசனின் மனம் திடீரென கிறீச்சிட்டு நின்றது.
ஆங்கிலம்
படிப்பதா? நானா?
கதிரேசனின் தயக்கத்தை உணர்ந்து கொண்ட, விஞ்ஞானி
கூறினார்.
நான் உதவுகிறேன், நீங்கள் படியுங்கள்.
விரைவிலேயே இருவரும், ஆசிரியரும்
மாணவருமாய் மாறிப் போயினர்.
பணி முடிந்ததும், மாலை வேலைகளில், ஆங்கிலத்தின்
அடிப்படை இலக்கணத்தை மிக எளிமையாய் சொல்லிக் கொடுத்தார்.
ஒரே வருடத்தில் கதிரேசன் பத்தாம் வகுப்பில்
தேர்ச்சி பெற்ற மாணவராய் மாறினார்.
+2 படிக்கலாமே?
படி, உன்னால் முடியும்.
தனித் தேர்வராய், +2 படிப்பில், கதிரேசன் சேர்ந்தார்.
படிப்பிற்கான முழுச் செலவினையும் விஞ்ஞானி
ஏற்றுக் கொண்டார்.
பணி
முடிந்து, மாலை விடுதிக்குத் திரும்பியதும், தினமும் ஒரு போட்டி நடக்கும்.
விஞ்ஞானி நூலகத்து நூல்களையும், கதிரேசன்
தன் பாட நூல்களையும் படிக்க வேண்டும். யார் அதிகம் படிக்கிறார்களோ, அவர்களே வென்றவராவர்.
கதிரேசனுக்குப் போட்டி பிடித்துப் போனது.
51.4 சதவித மதிப்பெண்களுடன் +2 தேர்வில் வெற்றி
பெற்றார்.
Small
aim is a crime
சிறிய இலக்கு, குற்றத்திற்குச் சமம்.
பி.எஸ்ஸி.,
கணினி அறிவியல் படி என்றார்.
கதிரேசனின் விருப்பமோ, வேறாக இருந்தது.
இருவரும்
பேசி, ஒரு முடிவிற்கு வந்து, இளங்கலை வரலாற்றைத் தேர்ந்தெடுத்தனர்.
அஞ்சல் வழிக் கல்வி.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், உலக வரலாற்றை,
அதிலும் குறிப்பாக, இரு உலக யுத்தங்களைக் கதை போல் சொல்லிக் கொடுத்தார்.
கதிரேசனுக்கு நாள் தோறும் வியப்பு கூடிக் கொண்டே
போனது.
இவர் உண்மையிலேயே அறிவியல் விஞ்ஞானியா? அல்லது
வரலாற்று ஆய்வாளரா?, என்னும் சந்தேகம் கூடிக் கொண்டே போனது.
51
விழுக்காடு மதிப்பெண்களுடன், இளங்கலையில் வெற்றி.
விஞ்ஞானி மகிழ்ந்தார்.
கதிரேசனின் குடும்பம் ஆனந்தக் கூத்தாடியது.
முதுகலைப் பட்டம் படியேன்
விஞ்ஞானி மேலும் உற்சாகப் படுத்தினார்.
இளங்கலை மட்டுமே பயின்றுள்ள விஞ்ஞானி, தன்
ஓட்டுநரை முதுகலைப் பட்டம் படி, படி என்று உற்சாகமூட்டினார்.
எம்.ஏ.,
பொலிடிக்கல் சயின்ஸ்.
பல தடைகள் வந்தபோதும், கதிரேசன் மனம் தளராமல்
படித்தார்.
ஒரு முறை, குடும்பச் சூழலால், ஒரு தேர்வினையேத்
தவற விட்டுவிட இருந்தார்.
தேர்வு எழுத சென்னைக்குச் சென்றாக வேண்டும்.
பயணிக்கப் போதுமான நேரமில்லை.
விஞ்ஞானி பார்த்தார். சற்றும் யோசிக்காமல்,
சற்றும் தயங்காமல், வானூர்தியில் சென்னைச் செல்ல, தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்தார்.
பத்து ஆண்டுகள்
பத்தே ஆண்டுகள்
பி.ஏ.,
எம்.ஏ., பி.எட்., எம்.எட்.,
கதிரேசன் படித்த படிப்புகள், அவரின்
பெயரின் எழுத்துக்களை விட அதிகமாய் நீண்டன.
பத்தாண்டுகள் நிறைவுற்றபோத, இராணுவம்,
கதிரேசனைத் திரும்ப அழைத்தது.
1992 இல், தன் குருவைப் பிரிய மனமின்றிப் பிரிந்தார்.
1998 இல் விருப்ப ஓய்வு பெற்றுத் தன் சொந்த
ஊருக்குத் திரும்பினார்.
பணி ஓய்வு பெற்றபோதும், தன் ஆசிரியர் உள்ளத்தில்
ஏற்றி வைத்த, படிப்பு, படிப்பு என்னும் ஒளி விளக்கு மட்டும், சற்றும் ஒளி குன்றாமல்
பிரகாசித்துக் கொண்டே இருந்தது.
மனோன்மணீயம்
சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டப் படிப்பிற்கு (டாக்டரேட்) பதிவு
செய்தார்.
முனைவர்
கதிரேசனாய் உயர்ந்தார்.
முனைவர் கதிரேசன்
இன்று,
திருநெல்வேலி, அரசு கலைக் கல்லூரியில்
உதவிப் பேராசிரியர்.
ஒரு ஓட்டுநர், உதவிப் பேராசிரியராய்
வளர்ந்தார்.
நண்பர்களே, பத்தாம் வகுப்பில்
தோல்வியுற்ற, ஒரு ஓட்டுநரை, அந்த ஓட்டுநருக்குள், அவருக்கே தெரியாமல், ஒளிந்திருந்த,
மறைந்திருந்த, கல்வி ஆர்வத்தை, இனம் கண்டு, ஆர்வமூட்டி, ஆதரவளித்து, படிக்க வைத்து,
உயர்த்திய, அந்த உன்னத உள்ளத்திற்குச் சொந்தக்காரர், உயரிய மனிதர் யார் தெரியுமா?
இளைஞர்களின் எழுச்சி நாயகர்
நம் பாரதத் திருநாட்டின்
முன்னாள் குடியரசுத் தலைவர்
மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
ahaa ! arumai. attakasam. rasithu padithen. mudivil viyanthen .pakirvukku nandri sago !
பதிலளிநீக்குநெகிழ்வான நிகழ்வு.
பதிலளிநீக்குதம +1
ஓட்டுனர்தானே என்று ஒரு விஞ்ஞானி நினைக்காமல் இருந்தது திரு.அப்துல் கலாம் போன்றவர்களால்தான் முடியும்.
பதிலளிநீக்குஎதையுமே மறக்காத பன்பானவர் அபுதாபில் செக்யூரிட்டியை ஜனாதிபதியாய் இருக்கும் பொழுது பொதுவில் மிகப்பெரிய மனிதர்கள் மத்தியில் செக்யூரிட்டி திரு. மாடசாமியை அறிமுகப்படுத்திய உயர்ந்த மனிதர் திரு. கலாம் அவர்கள்.
உலகில் இப்படி ஒருவரே இருக்க முடியும்.
த.ம.+1
முதல்குடிமகன் ஆனதற்க்கு அவருடைய ஊக்குவிக்கும் குணமும் முக்கிய காரணம் என்று இந்த நிகழ்வும் ஒரு சான்று :)
பதிலளிநீக்குஒரே பதிவில் இருவர் பற்றிய தகவல்கள் உங்களால்தான் சொல்ல முடியு ம்
பதிலளிநீக்குபடித்து வரும்போதே அந்த விஞ்ஞானி நம் கலாம் அவர்கள் தான்....என்று தெரிந்துவிட்டது. பின் அவரைத் தவிர வேறு யார் செய்வார்கள்.....அருமை....நெகிகிழ்ச்சியான பதிவு....
பதிலளிநீக்குதுளசி, கீதா
அருமையான பதிவு.
பதிலளிநீக்குஊக்கம் கொடுத்தவர் மனிதநேயம் மிக்க விஞ்ஞானி அபுதல் கலாம் அவர்கள் என்று பதிவை படிக்கும் போதே தெரிந்து விட்டது.
ஊக்கத்துடன் படித்து குடியரசி தலைவரின் நம்பிக்கையை காப்பற்றிய திரு . கதிரேசன் அவர்கள் போற்றபட வேண்டியவர்.
அருமை.
பதிலளிநீக்குவணக்கம் !
பதிலளிநீக்குஉண்மையில் கலாம் ஐயா மகாத்மா தான் ,,,உங்கள் ஒவ்வொரு பதிவிலும் மனம் நிறைகிறது பல்வேறு உத்தமர்களின் கதைகளை வாசிக்கையில் ...
தொடர வாழ்த்துகள்
தம +1
முனைவர் கதிரேசனை கண்டெடுத்தவர் புகழ் ஓங்குக!! நன்றி
பதிலளிநீக்குஅற்புதம் , முனைவர் கதிரேசனை எங்களுக்கு அறிமுகபடுத்தியதில் மிக்க மகிழ்ச்சி, நீங்கள் அறிமுக படுத்திய விதம் அருமை அருமையிலும் அருமை....ஆசிரியருக்கு எனது வணக்கங்கள்..
பதிலளிநீக்குஅருமை!!!!
பதிலளிநீக்குமுனைவர் கதிரேசனின் அறிமுகம் வழக்கம்போல உங்கள் பாணியில் அருமையாக இருந்தது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஊக்குவிக்க ஆள் இருந்தால்...
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்...
இந்தச் செய்தியைப் பற்றி ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கேன்! முனைவர் பெயர் தான் தெரியாது! மற்றபடி விபரங்கள் அறிந்திருக்கிறேன். நன்றி பகிர்வுக்கு!
பதிலளிநீக்குஒரே மூச்சில் படித்து முடித்தேன். மனம் ஒன்றி எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குபாராட்டுகள் ஜெயக்குமார்.
u might have aware about the then president wrote a letter from Rashtrapati Bavan Delhi. He is a great man.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குஇன்று வரை தெரியாத பெரிய அனுபவத்தை கொடுத்தது. உண்மையில் நெகிழ்ந்து போனேன். இனியாவது நம்மால் முடிந்த உதவி செய்ய முடிவெடுத்ததற்கு உதவியதற்கு நன்றி
பதிலளிநீக்குபுத்துணர்வு பகிர்வு ஐயா...
பதிலளிநீக்குSmall aim is a crime
சிறிய இலக்கு, குற்றத்திற்குச் சமம்....
எத்துனை அருமையான வரிகள்...
ஒரு ஓட்டுநர், உதவிப் பேராசிரியராய் வளர்ந்தார். வாழ்க!!
பதிலளிநீக்குஒரு ஓட்டுநர், உதவிப் பேராசிரியராய் வளர்ந்தார். வாழ்க!!
பதிலளிநீக்குஉள்ளம்உருக கலாமை வாழ்தினேன் கரநதை யாரும் வழ்த்து!
பதிலளிநீக்குஇதைப் படித்திருக்கிறேன். மீண்டும் உங்கள் எழுத்தில் படிக்கும்போது நெகிழ்ச்சி. மனிதனுக்கு மனிதத் தன்மையே மிக முக்கியம் என்பதை கலாம் பிறருக்கு அறிவுரையாகக் கூறவில்லை, வாழ்ந்துகாட்டினார். த ம
பதிலளிநீக்குஅன்புள்ள..
பதிலளிநீக்குவணக்கம். கதிரேசன் புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாமே?
அருமை.
பதிலளிநீக்குtamil manam - 10
https://kovaikkothai.wordpress.com/
அருமை
பதிலளிநீக்குதம +11
நெகிழ்ச்சி. இரண்டு பேருமே பாராட்டுக்குரியவர்கள். விஞ்ஞானியின் உதவியும், ஓட்டுனராக இருந்த திரு கதிரேசனின் விடாமுயற்சியும் போற்றுத்தலுக்குரியவை.
பதிலளிநீக்குசிறப்பான விஷயங்களை பதிவிடும் உங்களுக்கும் பாராட்டுகள்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமுதலாவது
பதிலளிநீக்குஅறிவாளிகளை உருவாக்கிய அறிவியலாளர்
அப்துல் கலாம் அவர்களிற்குப் பாராட்டுகள்!
இரண்டாவது
அப்துல் கலாம் அவர்களின்
சொல்லுக்கேட்ட ஓட்டுநருக்குப் பாராட்டுகள்!
மூன்றாவதாக - தங்கள்
கைவண்ணத்திற்குப் பாராட்டுகள்!