ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
பாரதியார்
நண்பர்களே, என் அலைபேசி அழைத்தது.
சார், நல்லா
இருக்கீங்களா, எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
குரலில்
மகிழ்ச்சி கரை புரண்டோடியது.
குழல் இனிது
யாழ் இனிது என்பர்
மக்கள்தம்
மழலைச் சொல் கேளாதவர்
என்று சும்மாவா
கூறினார்கள்.
மகிழ்வினும்
பெரு மகிழ்வு, தன் குழந்தையின் குரலினைக் கேட்பதில் அல்லவா இருக்கிறது.
பிறந்த நாள் என்றால் என்ன? என்று
கேட்கப் பெற்ற கேள்விக்கு, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்
வழங்கிய, பதில் இருக்கிறதே, அது ஒன்றே போதும்.