23 அக்டோபர் 2022

தொவரக் காடு

     ஏண்டி … அசதிக்கு ஒதுங்குனத எல்லாம் நா … கட்டித் தொலைக்கனும்னா எத்தனயதான்டி கட்றது. ஒங்க ஊருல ஒங்களையெல்லாம் தொட்டாலே தீட்டுங்குறானுக.

     போனாப் போகுதுன்னு, எறக்கப்பட்டு தொட்டா, புள்ளய சொமந்துக்கிட்டு புருசன் கேக்குறீங்களோ …

     சொல்லிக்கொண்டே, தாவணியால் கழுத்தை இறுக்கினான்.

    

12 அக்டோபர் 2022

காட்டுயானம்

     ஆண்களுக்குத் தனி.

     பெண்களுக்குத் தனி.

     குழந்தைகளுக்குத் தனி.

     பூப்படைந்த மற்றும் கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களுக்குத் தனி.

     தனி, தனி.

     தனி, தனி என்றால், எது தனி?

03 அக்டோபர் 2022

ரஞ்சன் குடி கோட்டை

 


 ஒரு யானை படுத்திருப்பது போன்ற வடிவம் கொண்ட சிறு மலை.

     நான்காயிரம் மீட்டர் சுற்றளவு.

     80 மீட்டர் உயரம்.

     இம்மலையின் உச்சியில் ஒரு கோட்டை.

    

24 செப்டம்பர் 2022

மாமனாரும், மருமகனும்



     ஆண்டு 1906.

     திருவல்லிக்கேணி.

     சுக்குராம செட்டித் தெருவில், தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த அம்மனிதர், ஒரு நாள் பட்டணம் நோக்கிச் சென்ற பொழுது, வழியில் ஒரு பெரிய வீட்டைப் பார்க்கிறார்.

     இந்தியா என்னும் வார இதழின் உரிமையாளர் திருமலாச்சாரியார் வீடு என்பதை அறிகிறார்.

      இதழின் உரிமையாளரைச் சந்திக்க எண்ணி, வீட்டிற்குள் நுழைகிறார்.

      அவர் மாடியில் இருக்கிறார் என்கிறார்கள்.

      மாடிக்குச் செல்கிறார்.

      உரிமையாளரைச் சந்திக்கிறார்.

      தனது ஊரையும், பெயரையும் கூறுகிறார்.

      மகிழ்ந்து போன உரிமையாளர், மாடியின் உள் பக்கம் நோக்கி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார், வந்து பாருங்கள் என யாரையோ அழைக்கிறார்.

     

15 செப்டம்பர் 2022

வெள்ளந்தி

 


ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டானாம்

வெள்ளரிக்காய்.

காசுக்கு நாலாய்

விக்கச் சொல்லி

காயிதம் போட்டானாம்

வெள்ளைக்காரன்.