12 ஜூலை 2022

நலம்பெற வாழ்த்துவோம்

  


     மெய்யறம்.

     மெய்யறிவு.

     பாடல் திரட்டு.

     இவையெல்லாம் இவர் எழுதிய கவிதை நூல்கள்.

     திருக்குறளுக்கும், சிவஞான போதத்திற்கும் உரை எழுதியுள்ளார்.

    

07 ஜூலை 2022

வள்ளியம்மை

 



     ஆண்டு 1913.

     தென்னாப்பிரிக்காவின் மாரிட்ஸ் பர்க்.

     இது ஒரு சிறைச்சாலை.

     இந்தச் சிறைச்சாலையில் வாடி வதங்கிக் கொண்டிருந்தார் ஒரு இளம் பெண்.

     தமிழ்ப் பெண்.

   

16 ஜூன் 2022

கோளி

 


மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய் பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

என்னும் தொல்காப்பியப் பாடல் வழி குறிப்பிடப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் எனப்படும் நான்கு நிலப் பாகுபாடே, இன்றைய அத்துணை வேளாண் ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாகும்.

24 ஏப்ரல் 2022

கடைசிக் கடிதம்

 


அன்புகெழுமிய அண்ணலே,

     தங்கள் நலம் விழையும் அவாவினேன். எனது அன்பிற்குரிய சிதம்பரம், அண்ணாமலை, சொக்கலிங்கம், திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தம் ஆகிய அனைவரும் நலந்தானே.

     தமிழாண்டின் முதனாளாகிய நன்னாளில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு, உதவி செய்யும் பெரியோர்களை யான் நினைப்பதும், அவர்கள் இயற்றிய அறச் செயல்களின் பெருமைகளை நினைத்து நினைத்து நன்றி கூர்வதும் இயல்புதானே.