தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
சமுத்திரம் போல் அமைந்த மைதானம்
அங்கே கூடினர் அத்தனை பேரும்.
வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்
உரக்கக் கேட்டான், உயிரோ நம்தமிழ்?
அகிலம் கிழிய ஆம் ஆம் என்றனர்.
உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரை சேர்த்தமைத் தார்கள்,
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தை யெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்கவி தொடங்கினர், பறந்தது தொழும்பு
கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்
வாழ்க்கையை வானில் உயர்த்தும் நூற்கள்
தொழில்நூல், அழகாய் தொகுத்தனர் விரைவில்
காற்றி லெலாம் கலந்தது கீதம்
சங்கீ தமெலாம் தகத்தகா யத்தமிழ்
பாவேந்தர் பாரதிதாசன்.
வலைப் பூ.
இந்த நான்கு எழுத்து வார்த்தையின்
வல்லமையினையும், இவ்வார்த்தையில் ததும்பிக் கொண்டிருக்கும், உடன் பிறவா உறவுகளின்
எல்லையற்ற அன்பினையும் எண்ணிப் பார்க்கின்றேன்.
ஒரு கணித ஆசிரியராய், சூத்திரங்களும், கரும்
பலகையுமே வாழ்வென்று எண்ணி, வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்
கிடந்தவன் நான்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு கணினி வாங்கி,
இரண்டாண்டுகள் அதனை ஒரு அலங்காரப் பொருளாகவே பத்திரமாய் பாதுகாத்து வந்தேன்.
பின் மெல்ல, ஒரு வலைப் பூவினைத் தொடங்கி, இணையக்
காட்டுக்குள் நுழைந்து, திக்கு திசை தெரியாமல், ஓர் ஆண்டினைச்
செலவிட்டிருக்கிறேன்.
பிறகு மெல்ல, மெல்ல ஓர் ஒற்றையடிப்
பாதையினைக் கண்டுபிடித்துத் தவழத் தொடங்கியபோது, முனைவர் பா.ஜம்புலிங்கம்
அவர்களும், பேராசிரியர், எழுத்தாளர் கவிஞர் முனைவர் ஹரணி அவர்களும், என்
இரு தோள்களையும் பற்றித் தூக்கி நிறுத்தி, நடை பயிலக் கற்றுக் கொடுத்து, ராஜ
பாட்டைக்குச் செல்லும் வழியினையும் சுட்டிக் காட்டினார்கள்.
அதன் பின்னரும் இவ்விருவரைத் தவிர, வலைப்
பதிவர் என்று யாரையும் நேரில் சந்திக்காமலேயேதான் என் காலம் கழிந்தது.
சென்னை வாழ் தமிழன்பர், உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர், மூங்கில் காற்று திரு டி.என்.முரளிதரன் அவர்கள்தான், தானே
முன்வந்து, எனது வலைப் பூவினைத் தமிழ் மணத்தில் இணைத்து, வலை உறவுகளின் எல்லையை
விரிவுபடுத்தினார்.
முகமறியா நட்பின் ஆழம் கண்டு
நெகிழ்ந்துதான் போனேன்.
வலைப் பூவில் தொழில் நுட்பம் சார்ந்த
சிக்கல்களை, எதிர்கொண்ட போதெல்லாம், திண்டுக்கல்லில் இருந்து, ஓர் கரம் உடனே
நீண்டு வந்து, என்னை மீட்டது.
வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்.
என் மனதில் ஓர் ஆசை. இவ்விருவரையும் ஒரு
முறையேனும் நேரில் சந்த்தித்தாக வேண்டும் என்ற ஆசை..
வலையுலக பிதாமகர்கள் இவ்விருவரையும் நேரில்
சந்திக்க, ஓர் பொன்னான வாய்ப்பும் கிட்டியது.
வாய்ப்பினை வழங்கியவர் யார் தெரியுமா?
புதுகை
மாமனிதர்
உலகு
போற்றும் பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர்
கவிஞர்
முத்து நிலவன்.
கணினிப் பயிற்சிப் பட்டறைக்கு வாருங்கள்
என்றார். சென்றேன்.
முதன் முதலாய் கவிஞர் முத்து நிலவன் ஐயா
அவர்களைச் சந்தித்தேன். தொலைக் காட்சிப் பெட்டிகளில் மட்டுமே பார்த்த, சிரித்த
முகத்தை, மலர்ந்த முகத்தை, நேரில் கண்டேன்.
மூங்கில்
காற்று திரு டி.என்.முரளிதரன் ஐயா அவர்க்ளையும்
வலைச்
சித்தர் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களையும்
சந்தித்தேன்.
இவர்களை
மட்டுமா,
புதுக்கோட்டை
வலை உலகையே,
அன்றுதான்
கண்டேன், பிரமித்தேன்.
யாருக்குக்
கிடைக்கும் இப்படி ஒரு பாக்கியம்.
இழந்த உறவுகளைக் கூட எனக்கு மீட்டுக்
கொடுத்தது, இந்த வலைப் பூதான்.
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் அவர்களைப்
பற்றி, எம்.ஃபில்., ஆய்வு மேற்கொண்ட போது, கணினியில், இணையத்தில், செய்திகளைத்
தேடித் தேடி, எனக்கு, வாரிக் கொடுத்தவர் இவர்தான்.
பல்லாண்டுகளாய் இழந்திருந்த இவர்தம் உறவை,
தொடர்பை. நட்பை எனக்குப் புதுப்பித்துக் கொடுத்தது வலைப் பூதான்.
மதுரை வலைப் பதிவர் திருவிழா, 2014
எழுத்துக்களின் வழி வாசித்து, நேசித்த,
நண்பர்களை, சகோதரிகளை, நேரில் கண்ட அற்புத நாள்.
மூத்த பதிவர்கள் திரு
ஜி.எம்.பாலசுப்பிரமணியன் ஐயா, திரு அன்பின் சீனா, கவிஞர் ரமணி, பேராசிரியர் தருமி,
திருச்சி திரு தமிழ் இளங்கோ, ஸ்ரீவில்லிப் புத்தூர் திரு ரத்ணவேல் நடராசன்
ஐயா, மீசைக்குள் முகத்தை ஒளித்து வைத்திருக்கும் பாசக்கார, மீசைக்கார நண்பர்
கில்லர் ஜி, திரு விமலன், திரு ஜோக்காளி, குடந்தை சரவணன் என நீண்டதொரு உறவுகளைக்
கண்ணாரக் கண்டு கைகுலுக்கிய திருநாள்.
இதுபோலே வருமா
இனிமேலே
என்று எண்ணி ஏங்கி இருந்த நேரத்தில், வந்துள்ளது ஓர் பொன்னான அறிவிப்பு.
அதுவும்
வலைப் பூவின் கோட்டையாகத் திகழும்
புதுக் கோட்டையில் இருந்து
வலைப் பதிவர்
சந்திப்புத் திருவிழா, 2015.
புதுக்கோட்டையே பம்பரமாய்ச் சுழன்று,
சுழன்று, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், திட்டமிட்டு,
திட்டமிட்டு, விழாவிற்கு மெருகூட்டிக் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு குழு
விதவிதமாய் விருது அறிவிப்புகள்
வலைப் பதிவர் கையேடு வெளியிடல்
நூல்கள் வெளியிடல்
வலைப் பதிவர் புத்தகக் கண்காட்சி
திகட்டத் திகட்டத் திட்டங்கள் செயலாக்கம் பெற்றுக் கொண்டே
இருக்கின்றன.
வலைப் பதிவர் திருவிழாவிற்கென்று
தனி மின்னஞ்சல்
தினந்தோறும் திட்டங்களை, விழா முன்னேற்பாடுகளை
முரசு கொட்டி அறிவிக்க
தனியே
ஓர் வலைப் பூ.
போகிற போக்கைப் பார்த்தால், வலைப்
பதிவர் சந்திப்பு சிறப்புப் பேருந்து, வலைப் பதிவர் சந்திப்பு சிறப்புத் தொடர்
வண்டி, வலைப் பதிவர் சந்திப்பு சிறப்பு வானூர்தி என்று விட்டாலும், விடுவார்கள்
போலிருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஆர்வமும், வியப்பும் கூடிக் கொண்டே செல்கிறது.
எப்பொழுது அப்டோபர் 11 எனும் நன்நாள்,
திருநாள் வரும் என்று மனது அலை பாய்கின்றது.
நண்பர்களே, எனக்குள் ஓர் ஆசை. பேராசை
என்று கூடச் சொல்லலாம். இப்படி ஒரு அருமையான நன்நாளில், உலகோர் போற்ற அரங்கேற
இருக்கும் திருவிழாவில், நூல் ஒன்றினை வெளியிட்டுவிட வேண்டும் என்னும் பேராசை.
வித்தகர்கள்
தாங்கள் எடுத்துக் கொண்ட துறைகளில் உச்சம் தொட்ட, மாமனிதர்கள் ஐவரின்
சாதனைகள் பற்றிய ஒரு சிறுநூல். அச்சகத்தில் சுடச் சுட தயாராகிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, நாள் தோறும் நமக்குச்
சொந்த அலுவல்கள், காலையில் கண் திறந்த நொடி முதல், இரவு அசந்து போய், படுக்கையில்
உடல் சாய்க்கும் அந்நொடி வரை, பிரச்சினைகள், கவலைகள், இன்னல்கள் இருக்கத்தான்
செய்யும்.
பிரச்சினைகள் இல்லா வாழ்வு, என்றுமே இனிக்காது அல்லவா.
நமது சொந்த பிரச்சினைகள்,
இன்னல்கள், சோகங்கள் அனைத்தையும் ஒரு நாள் மறந்து விட்டு, ஒரே ஒரு நாள் துறந்து
விட்டு, தூர தூக்கி எறிந்து விட்டு, புதுகையில் சங்கமிப்போமா நண்பர்களே.
பேருந்திற்கோ, தொடர்
வண்டிக்கோ, வானூர்திக்கோ முன் பதிவு செய்ய வேண்டியிருந்தால், இன்றே புறப்படுங்கள்.
முன் பதிவு செய்திடுங்கள்.
வாய்ப்பிருப்பின் குடும்பத்தாரையும் அழைத்து வாருஙகள். வசதியிருப்பின்
நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
இணையம்
வழி இணையும் தமிழர்கள்
இதயம்
வழி இணைவதோடு
இனிய
தமிழ் வழியும் இணைய
என்
வாழ்த்துக்கள்
தூரங்கள்
என்பன,
சமீபங்களின்
விரிவுகளே தவிர,
பிரிவுகள்
அல்ல!
பிரிவுகள்
என்பன,
உறவுகளின்
விரிவுகளே தவிர
முடிவுகள்
அல்ல!
என்று
வாழ்த்துவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
இவ்வாண்டு நமக்கு
தீபாவளியும், தைப் பொங்கலும்
இணைந்து,
ஒரே நாளில் வருகின்றன.
அதுவும் புதுக்கோட்டையில்.
அக்டோபர் 11 இல்.
வாருங்கள் நண்பர்களே, வாருங்கள்
புதுக்கோட்டையில் சங்கமிப்போம்.
விழா சிறக்கட்டும்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவர இயலாத நிலை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துகள்
நன்றி ஐயா
நீக்குவர இயலாத சூழல். அடுத்த பயணத்தின் போதாவது உங்களையும், புதுக்கோட்டை நண்பர்களையும் சந்திக்க வேண்டும்.
பதிலளிநீக்குவிழா சிறக்க எனது வாழ்த்துகள்.
அடுத்தப் பயணத்தின் போது தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
நீக்குதான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற நோக்கோடு பதிவர்களை சந்தித்த அனுபவத்தை இன்பத்தை பகிர்ந்தது அருமை. இந்த இனிமையான அனுபவம் பெற மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி புதுகையில் ஒருங்கிணைவோம். இணையத் தமிழ் வளர்ச்சிக்கு நம் பங்கை அளிப்போம்
பதிலளிநீக்குபுதுகையில் ஒருங்கிணைவோம் ஐயா
நீக்குநன்றி
அண்ணா மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.மிக்க நன்றி அண்ணா....புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம் அண்ணா...
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅடுத்தவர்களுக்கு மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் எழுதிவிட்டீர்களே நண்பரே! உங்களை நேரில் காண ஆவலோடு ஓடோடி வருவேன் புதுக்கோட்டைக்கு! - இராய செல்லப்பா
பதிலளிநீக்குதங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்தருக்கிறேன் ஐயா
நீக்குஅடுத்தவர்களுக்கு மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் எழுதிவிட்டீர்களே நண்பரே! உங்களை நேரில் காண ஆவலோடு ஓடோடி வருவேன் புதுக்கோட்டைக்கு! - இராய செல்லப்பா
பதிலளிநீக்குதங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்தருக்கிறேன் ஐயா
நீக்குஅருமை! அருமை! இப்போதே கலந்து கொள்ளும் ஆவல் வந்துவிட்டது. வழிகாட்டிய பதிவர்கள் பற்றிய நன்றிக் கடன் அசத்தல்!
பதிலளிநீக்குத ம 6
நன்றி நண்பரே
நீக்குதங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
அடடா கரந்தையாரே ... ஒழிவிலா உண்மைகளை உருக்கி வடித்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களின் வேண்டுகோளின்படி நிறைய வலைப்பதிவர்கள் முதல்நாள் உலாப்போகும் நோக்கில் வந்து விட்டால் என்ன செய்வது? எப்படி அவர்கள் எண்ணங்களை ஈடேற்றுவது? என மாநாட்டுக் குழு இப்போதே திகைக்த் தொடங்கி விட்டது
தங்களால் இயலாத செயலா ஐயா
நீக்குநன்றி ஐயா
விழா சிறக்க வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அற்புதமான மனிதர்கள் பற்றி சொல்லி வித்தகர்கள் என்ற நூலும் வலைப்பதிவர் சந்திப்பில் அறிமுகம் காண்கிறது என்ற தகவலை பார்த்த போதுமகிழ்ச்சியடைந்தேன்
பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள். த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
”அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா” – என்ற தி.மு.கவின் அந்நாளைய எழுச்சி மிக்க பாடலை நினைவு படுத்தியது உங்கள் பதிவின் தலைப்பு. புதுகை அழைக்கின்றது என்பதனை விட, கரந்தையார் அழைக்கின்றார் என்பதே சரியானது என்று நினைக்கின்றேன். காரணம் உங்கள் கட்டுரையில் உள்ள எழுச்சி மிக்க கருத்துக்கள்! சந்திப்போம்! புதுக்கோட்டையில்!
பதிலளிநீக்குபுதுக்கோட்டையில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
நீக்குநன்றி
வலைப்பூ வித்தகரே வாருமையா வாரும் ...
பதிலளிநீக்குஉங்கள் நூலுக்கு காத்திருக்கிறேன் ..
நன்றி
தம +
நன்றி நண்பரே
நீக்குபுதுக்கோட்டையில் தங்களை காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்
நன்றியும், வாழ்த்துகளும் நண்பரே....
பதிலளிநீக்குதமிழ் மணம் 10
நன்றி நண்பரே
நீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள் தங்கள் நூல்வெளியீடும் வெற்றிமாலை சூடட்டும்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஉங்கள் பாணி அழைப்பே உவகை ஊட்டுகின்றது ,வராமல் இருப்பேனா ?
பதிலளிநீக்குஎன் வலைப்பூவின் பெயரையே எனக்கு சூட்டி அழகு பார்த்த உங்களுக்கு பகவான்ஜியின் நன்றி :)
தங்களின் பதிவின் பெயரே
நீக்குமுதன் முதலில் நினைவிற்கு வருகின்றது நண்பரே
புதுகையில் சந்திப்போம்
உங்கள் வசீகரிக்கும் எழுத்தில் அருமையாய் அழைத்திருக்கிறீர்கள் அண்ணா. இந்த வருடம் வர இயலாமல் இருக்கிறது எனக்கு. உங்கள் நூல் வெளியீட்டிற்கு மனமார்ந்த நன்றி அண்ணா
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குvilaa sirakka valthukkal sako!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்கு
பதிலளிநீக்குநூலாசிரியரின் நுண்ணறிவு எழுத்துக்களை வாசிக்க காத்திருக்கிறோம்.
புதுகை புதுயுகம் காண வாழ்த்துகள்!
நன்றி கரந்தையாரே!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
நன்றி நண்பரே
நீக்குஎதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குசந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
நீக்குநன்றி
தங்கள் உள்ளம் தொட்டு
பதிலளிநீக்குஉண்மை வெளிப்பட்டு
நம்மாளுங்க உள்ளத்தில்
மாற்றம் வெளிப்பட்டு
புதுக்கோட்டைக்கு வருவார்கள்
நன்றி ஐயா
நீக்குமிகவும் அழகாக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குDear Mr.Jayakumar,you have broken the ice.I am tempted to come.Thirupperumthurai alias "AVADAYARKOIL"is the place where Thiruvachagam was born,and I was in 1962.On 08 May 1962,there was wide spread news that 8 planets are getting together in one house and the world will face thundering changes.Perhaps great changes were initiated in my life on that day.I am planing to come in my car.you may kindly give all my particulars.I will come with my better half.Thank you.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅவசியம் வாருங்கள்
sir please refer to this page http://bloggersmeet2015.blogspot.com/2015/09/26-30.html
நீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஉங்களது எழுத்தின்மீதான முன்னேற்றம், ஆர்வம், வலைத்தளத்தில் ஆரம்ப நிலை, தொடர்ந்து பல பரிமாணங்களைச் சந்தித்த நிலை, முத்தாய்ப்பாக நிகழவுள்ள புதுக்கோட்டை சங்கமத்திற்காகத் தாங்கள் பதிந்துள்ள விதம் சற்று யோசிப்பவரையும்கூட எழுத வைக்கும். சிந்திக்க வைக்கும். நான் தந்த ஊக்கத்தைப் பகிர்ந்து என்னைப் பாராட்டியமையறிந்து மகிழ்ச்சி. புதுக்கோட்டை செல்வோம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஎதையும் திட்டமிடும் நிலையில் நான் இல்லை. மனம் இருக்கிறது வருகைதர. மார்க்கம் உள்ளதா தெரியவில்லையே. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅவசியம் வாருங்கள் ஐயா
நீக்குநன்றி
பதிலளிநீக்குஎன் மனது சொல்லுகிறது இந்த விழாவில் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு விருது கிடைக்கும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் வாழ்க வளமுடன்
தங்களின் அன்பான வார்த்தை ஒன்றே போதும் நண்பரே
நீக்குநன்றி
எளியேனையும் நினைவு கூர்ந்த பெருந்தன்மைக்கு என்றென்றும் அன்பின் வணக்கங்கள்..
பதிலளிநீக்குசுவைமிகு கனியாக - இன்றைய பதிவு..
வித்தகர்கள் - எனும் நூலினை வெளியிடும்
வித்தகம் - வெற்றி கொண்டு வாழ்தற்கு
அன்பின் நல்வாழ்த்துகள்!..
நன்றி ஐயா
நீக்குவலை துவங்கி வழிகாட்டிய அனைத்து நண்பர்களையும் நினைவுப்படுத்திப்போன விதமும். பதிவர் விழா பற்றிய பகிர்வும் வெகு சிறப்புங்க சகோ. நூல் வெளியீட்டிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். விழா சிறக்கப்பாடுபடும் விழாக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குவிழா சிறக்க எனது வாழ்த்துகள்..வர இயலாத நிலை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துகள்
நன்றி சகோதரியாரே
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குதங்கள் பாணியில் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பை அழகாக சொல்லியுள்ளீர்கள்.புதுக்கோட்டைக்கு அழைப்பது போல் தங்கள் உள்ளத்து நன்றிதனைச் சொல்லியுள்ளீர்கள்,,,,,,,,,
அருமை சகோ,
தங்கள் நூல் வெயியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரியாரே
நீக்குஉங்களது பாணியில் விழாவினை பற்றி அசத்தலாக எழுதி அசத்திவிட்டீர்கள்! புதுகையில் சந்திப்போம்! நன்றி!
பதிலளிநீக்குபுதுகையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
நீக்குநன்றி
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்கு’புதுக்கோட்டை அழைக்கிறது’ பதிவு படிப்போரை ஈர்க்கிறது. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள். நானும் வருகிறேன் என்ற மகிழ்ச்சியும் இப்பொழுதே ஏற்பட்டு விட்டது.நன்றி.
நன்றி நண்பரே
நீக்குநன்றி நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே
பதிலளிநீக்குஅத்தனைப் பேரையும் அழக்காக நினைவிலிருத்தி
பதிலளிநீக்குஅருமையான பதிவாகத் தந்தீர்கள் ஐயா!
நடக்கப் போகும் விழாவின் சிறப்புகளைப் பார்க்கையில்
திருவிழாவிற்கு வரமுடியாத குழந்தையாக மனம்
விம்முகிறது. கண்கள் சொரிகிறது...
நாமும் அங்கு வந்து இந்த அன்பு உறவுகளைக் காணோமா என
(முடியாது எனத் தெரிந்தும்) ஏக்கம் எனைப் பைத்தியமாக்குகின்றது!
என்ன செய்வது?...
உங்கள் நூல் வெளியீடும் பதிவர் விழாவும் சிறக்க
உளமார்ந்த வாழ்த்துக்கள்!
த ம +1
நன்றி சகோதரியாரே
நீக்குஅன்பின் ஜெயக்குமார் அவர்களே !
பதிலளிநீக்குஅருமையான பதிவு. புதுக்கோட்டையில் நடை பெற இருக்கும் பதிவர் சந்திப்பிற்கு அவசியம் வருகிறோம். பல்வேறு இடங்களீல் நடை பெற்ற சந்தி[ப்புகளைத் தொடர்ந்து தற்போது புதுக்கோட்டையில் பதிவர்கள் சந்தித்து மகிழ நல்லதொரு வாய்ப்பு கிடைத்தமைக்கு.
புதுகையில் சந்தித்து மகிழ்வோம்.
விழா சிறப்புற நடை பெற பிரார்த்தனையுடன் கூடிய நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா
நன்றி ஐயா
நீக்குபுதுகையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
அசத்தல் பதிவு! உங்கள் எழுத்தில். அனைத்து நண்பர்களையும் இங்கு சொல்லி விழாவையும் பாங்குடன் உரைத்தமை அருமை...வாழ்த்துகள் தங்கள் நூல் வெளியீட்டிற்கு. காத்திருக்கின்றோம் நண்பரே தங்களைச் சந்திக்க....
பதிலளிநீக்குதங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
நீக்குநன்றி
விழா பற்றிய பதிவு மிக்க அருமை அய்யா
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅண்ணா!!! உங்கள் பதிவு எழுச்சி மிக்கதாய் இருக்கிறது!!! எப்படித்தான் உங்களால் மட்டும் இப்படி எழுத முடிகிறதோ!!! அருமை அண்ணா!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅருமையான பதிவு! உங்கள் நூல் வெளியீட்டுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅனைவரின் சார்பாக நண்பர்களை அழைத்திருக்கும் அற்புதமான அழைப்பிற்கு அன்பான நன்றிகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவிழா சிறக்க வாழ்த்துகள். இயன்றால் வருகிறேன்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅவசியம் வாருங்கள்
கணினி இணையம் தொடர்பாக பயனுள்ள பல தகவல்கள்..நன்றி... உடுவை
பதிலளிநீக்கு