10 அக்டோபர் 2015

வென்றோரை வாழ்த்துவோம்


   

  நண்பர்களே, தமிழ்கூறு நல்லுலகே ஆவலுடன் எதிர்பார்த்த, ஐவகைப் போட்டிகளுக்கான முடிவுகள் வெளிவந்து விட்டன. வெற்றியாளர்கள் அறிவிக்கப்பெற்று விட்டனர்.

     வெற்றியாளர்களோடு, நடுவர்களாய் திறம்படச் செயலாற்றிய, நமது பெருமைமிகு பதிவர்களின் பெயர்களும் வெளி வந்திருக்கின்றன.


உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்லுகிறேன்
என்று சொல்வார்கள்.

     அதைப் போல, நீதி நெறி வழுவாத, நடுவர்களின் பட்டியலே, போட்டியின் தரத்தினைச் சொல்லாமல் சொல்லுகிறது.

     முதலில் வெற்றி பெற்றோர் யார் என்று பார்க்கலாமா.

வகை (1)
கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன்  
மாயனூர், கரூர் மாவட்டம்
   26. →தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் - கோயம்புத்தூர்
   14. →கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ

திருமிகு  P.S.D.பிரசாத் - சென்னை
   16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே

மூன்றாம் இடம்
திருமிகு  வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை
வகை(2)
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் - மதுரை
   13. →இருட்டு நல்லது..!

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
திருமிகு  கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
   05. →கான் ஊடுருவும் கயமை

மூன்றாம் இடம்
திருமிகு  கோபி சரபோஜி - சிங்கை
   10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?


வகை(3)
 பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி - கன்னியாகுமரி
   10. →இதுவும் தப்பில்லை

இரண்டாம் இடம்
திருமிகு  ரஞ்சனி நாராயணன் - பெங்களூரு
   39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா
   04. →உன்தடம் மாற்றிடு தாயே!




வகை(4)
புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் - புதுக்கோட்டை
   40. →சின்னவள் சிரிக்கிறாள்

இரண்டாம் இடம்
திருமிகு  இரா.பூபாலன் - கோயம்புத்தூர்
   69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

மூன்றாம் இடம்
திருமிகு  வைகறை - புதுக்கோட்டை
   27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்

வகை(5)
மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி
   20. →புறப்படு வரிப்புலியே

இரண்டாம் இடம்
திருமிகு  மகா.சுந்தர் - புதுக்கோட்டை
   25. →விரைந்து பாயும் விண்கலம் நீ!

மூன்றாம் இடம்
திருமிகு  கருமலைத் தமிழாழன் - கிருஷ்ணகிரி
   02. →கனவுகளுகம் நனவாகும்

விமரிசனப் போட்டி

முதல் இடம்
யாருமில்லை

இரண்டாம் இடம்
திருமிகு கலையரசி ஞா - புதுச்சேரி

மூன்றாம் இடம்
திருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி


வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்

வெற்றியாளர்களைக் கண்டோம்,
இவ்வெற்றியாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய
நடுவர்கள் யார் என்று பார்ப்போமா?


முனைவர் திருமிகு பா.மதிவாணன்
(
தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பதிவர்)

பேராசிரியர் திருமிகு இல.சுந்தரம்
(கணினித் தமிழாய்வர், SRM பல்கலைக்கழகம், பயிற்றுநர் உத்தமம்)

எழுத்தாளர் திருமிகு ஹரணி
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)

கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி
(கவிஞர், சாகித்யஅகாதெமி உறுப்பினர், பதிவர்)

முனைவர் திருமிகு மு.பழனியப்பன்
(தமிழ்த்துறைத் தலைவர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு புதியமாதவி - மும்பை
(
எழுத்தாளர், ஊடகர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

திருமிகு தி.ந.முரளிதரன்
(உதவி தொடக்கக் கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)

முனைவர் திருமிகு இரா.குணசீலன்
(தமிழ்ப் பேராசிரியர், பிரபல பதிவர்)

திருமிகு செல்லப்பா யாகசாமி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

திருமிகு பொன்.கருப்பையா
(விருதுபெற்ற ஆசிரியர், எழுத்தாளர், நாடகர், பதிவர்)

திருமிகு ராசி.பன்னீர்செல்வன்
(
விருது பெற்ற ஆய்வாளர், பதிவர்)

புலவர் திருமிகு கு.ம.திருப்பதி
(மூத்த தமிழாசிரியர், இலக்கிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு இரா.எட்வின்
(கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிவர்)

திருமிகு துளசிதரன் - பாலக்காடு
(ஆசிரியர், குறும்படம் இயக்குனர், அனுபவமிக்க பதிவர்)

திருமிகு எஸ்.ரமணி
(எழுத்தாளர், மூத்த பதிவர்
     நடுவு நிலை நின்று, போட்டியாளர்களின் எழுத்துக் கடலில் மூழ்கி, முத்தெடுத்து, எழுத்துக்களின் வழி வெளிப்பட்ட சீர்மிகு எண்ணங்களை, சிறப்புமிகு சிந்தனைகளை உரசிப் பார்த்து, தரத்தினை உறுதி செய்து, விலை மதிப்பிலா முத்துக்களில், நல் முத்து இதுவே என்று, உலகறிய உரைத்த, நடுவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.

வெற்றியாளர்களுக்கு
வாழ்த்துக்கள்
நடுவர்களுக்கு
வணக்கங்களும், நன்றியும்

போட்டிகளைத்
திறம்படத் திட்டமிட்டு நடத்திய,
கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும்
அவர்தம் புதுகை அணியினரையும்
பாராட்டுவோம்.

வெற்றியாளர்களுக்குப்
பொறிகிழியும்
நற்சான்றிதழும்
வழங்கும்
தமிழ் இணையக் கல்விக் கழகத்தைப்
போற்றுவோம்.

நண்பர்களே, நாளை நம் சந்திப்பு.
புதுகையில்
கிளம்பிவிட்டீர்களா,
உடனே புறப்படுங்கள்

பு து கை யி ல்    ச ந் தி ப் போ ம்