30 அக்டோபர் 2015

சிகரத்தை நோக்கி


     நண்பர்களே, அரசு ஊழியர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் நிச்சயமாக இணைந்திருப்பார்கள். பலரோ ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்திருப்பார்கள்.

      அரசு ஊழியர் அல்லாதவர்களில் பெரும்பாலானர்கள், நிச்சயமாக காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்தே இருப்பார்கள்.

              குடும்பத்தினை மையமாக்க் கொண்ட வாழ்வினை வாழ்ந்து வருபவர்கள் அல்லவா நாம். எனவே காப்பீட்டுத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.


        காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்திருந்தாலும், காப்பீட்டு நிறுவனத்தைப் பற்றிய செய்திகளை, சில நாட்களுக்கு முன்பு வரை, அறியாதவனாகவே, இருந்துள்ளேன் என்பதுதான் உண்மை.

        இந்தியாவில் முதன் முதலாக, காப்பீட்டு நிறுவனம் மூச்சு விடத் தொடங்கியது எப்போது தெரியுமா?

       1818 இல்.

       ஓரியண்டல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி.

       இந்நிறுவனம் கால் பதித்த முதல் இடம் கல்கத்தா.

       ஆனாலும் இந்நிறுவனம், மூச்சு விடத் தொடங்கிய, 16 ஆண்டுகளிலேயே, அதாவது 1834 லேயே திவாலாகிப் போனது.

       பிறகு 1871 இல் பாம்பே மியூச்சுவல் என்ற நிறுவனமும், 1874 இல் ஓரியண்டல் நிறுவனமும் ( இது வேறு ஓரியண்டல்), 1897 இல் எம்பயர் ஆஃப் இந்தியா நிறுவனமும் ஒவ்வொன்றாக தலை தூக்கின.

             ஆனாலும் 1907 இல்தான் பொது இன்சூரன்ஸ் தொழில் செய்ய, மெர்கண்டைல் இன்சூரன்ஸ் கம்பெனி உருவானது.

      நண்பர்களே, இவை எல்லாமே ஐரோப்பியக் கம்பெனிகள்.

       இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்நிறுவனங்கள் தொடங்கப் பெற்றது என்னவோ இந்தியாவாக இருந்த போதிலும், இவை தொடங்கப் பெற்றது இந்தியர்களுக்காகவே அல்ல.

        இந்தியாவில் இருக்கும் ஐரோப்பியர்களுக்காக மட்டுமே, இந்நிறுவனங்கள் அவதாரம் எடுத்தன.

       பிறகுதான் மெல்ல மெல்ல, இந்திய முதலாளிகள், இந்தியர்களுக்கான காப்பீட்டு நிறுவனங்களைத் தொடங்கினர்.

        ஆனால் இந்திய முதலாளிகளின் திட்டம் வேறாக இருந்தது. இந்திய முதலாளிகள் யார் யாரெல்லாம் காப்பீட்டு நிறுவனங்களைத் தொடங்கினார்களோ, அவர்கள் அனைவரும், தவறாது வங்கிகளையும் தொடங்கினார்கள்.

      எதற்குத் தெரியுமா?

       இன்சூரன்ஸ் வணிகம் என்பது, அடிப்படையில் நீண்டகால சேமிப்பைத் திரட்டுகின்ற ஒரு வணிகம்.

       இவர்கள் தங்களது கை காசினை பைசா செலவழிக்காமல், இந்தியர்களின் நீண்ட கால சேமிப்பினை மூலதனமாகக் கொண்டு, தங்களுக்கே தங்களுக்கான, புத்தம் புது தொழில்களைத் தொடங்க விரும்பினர்.

          எனவே மூலதனம் திரட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனங்களைத் தொடங்கினர்.

           மூலதனத்தை முதலீடு செய்ய வங்கிகளையும் தொடங்கினர்.

          இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், வெளி நாட்டு நிறுவனங்கள் எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை, முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறின.

    இந்திய முதலாளிகள் தனிக் காட்டு ராஜாவாக மாறினர்.

    ஊழியர்களின் துயரம் அதிகரித்தது. முறையான பணி நேரம் கிடையாது. முறையான பணி விதிமுறைகள் கிடையாது அடக்கு முறையே முதலாளிகளின் தாரக மந்திரமாக மாறிப் போனது.

     விளைவு ஊழியர்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.

      பொறுத்தது போதும், இனி பொங்கி எழுவோம் என்று எண்ணி, 1945 இல், வங்காள இன்சூரன்ஸ் அலுவலர் சங்கம், தன் நெஞ்சம் நிமிர்த்தி உதயமானது.

      பின், மெல்ல மெல்ல, இந்தியா முழுவதும் ஊழியர் சங்கங்கள் பல்கிப் பெருகத் தொடங்கின.

      1951 இல் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள், பம்பாயில் ஒன்று கூடி, பெருங் குரலெடுத்து, ஒரே குரலாய், ஒருமித்த குரலாய், உலகே அதிர, ஓங்கி முழங்கினர்.

       இன்சூரன்ஸ் துறையினை தேசிய மயமாக்கு.

       போராட்டம் தொடங்கியது, தொடர்ந்தது.

       1956, சனவரி 19இல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தேசிய மயமாக்கப் பட்டது.

        நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. என்னடா இவன் திடீரென்று, காப்பீட்டுத் துறையைப் பற்றிப் பேசுகிறானே என, நீங்கள் வியந்து நோக்குவது புரிகிறது.

        ஒரு நூலினைப் படித்தேன். படிக்கப் படிக்க, பக்கத்துக்குப் பக்கம், காப்பீட்டுக் கழக ஊழியர்களின் போராட்ட வரலாறு, நெஞ்சை நெகிழச் செய்தது.



சிகரத்தை நோக்கிய பயணத்திலிருந்து சில துளிகள் .......
வேலூர் கோட்டத்தின் 25 ஆண்டுகள் – ஒரு அனுபவப் பகிர்வு.

      வேலூர் என்றவுடன் புரிந்து விட்டதா நண்பர்களே.


வலைப் பூவின், பதிவர்

தோழர் எஸ். இராமன் அவர்களின்

அயரா உழைப்பில்,
உருவும், உயிரும் பெற்று
நூல் வடிவில் காட்சி தருகிறது
காப்பீட்டுக் கழக ஊழியர்களின்
கம்பீர வரலாறு.

     வரலாற்றின் பல நிகழ்வுகள் இந்நூலில் அருமையாக தொகுக்கப் பெற்றுள்ளன.

     பூக்களைத் தொடுக்கின்ற, இணைக்கின்ற நார் போன்று, மக்களை நெருங்குகின்ற, நேசிக்கின்ற தொழிற் சங்க அணுகுமுறை எவ்வாறு பரிணமித்து வளர்ந்துள்ளது என்பதை அழகாக விளக்குகிறது இந்நூல்.

     கொள்கை அளவில், ஊழியர்களின் கடமை என்ன, அவர்களின் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும், அவர்களின் சமுதாயப் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம், ஊழியர்களுக்குச் சுட்டிக் காட்டும், தோழமை மிகுந்த வழிகாட்டி இந்நூல்.



கடந்த 11.10.2015 அன்று புதுகையில் நடைபெற்ற,
பதிவர் சந்திப்புத் திருவிழாவில்தான்
தோழர் எஸ்.இராமன் அவர்களை,
முதன் முதலாக நேரில் கண்டேன்.

      நெடுநாள் பழகிய ஓர் உணர்வு. தினம், தினம் அவர்தம் உள்ளத்து உணர்வுகளை, வலையில் வாசிப்பதால் ஏற்பட்ட மன நெகிழ்வு.

       காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இவர்.

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?

உலகாள உனதுதாய்மிக
உயிர்வதை யடைகிறாள்
உதவாதினி ஒரு தாமதம்
உடன விழி தமிழா

என முழங்கும் பாவேந்தரின் பாடல் வரிகளுக்கு எற்ப, சிறுமை கண்டவிடத்து பொங்கி எழும் போராட்ட குணம் மிகுந்தவர். ஆனாலும் சிரித்த முகம். தோழமை பாராட்டும் கண்கள். தேனினும் இனிய மென்மையான சொற்களுக்குச் சொந்தக்காரர்.

     சிறிது நேரம்தான் பேச முடிந்தது எனினும், வாழும் காலம் வரை, தோளில் கைபோட்டு, தோழமையுடன் உலா வரும் நட்பினை உணர முடிந்தது.

சிகரத்தை நோக்கிய பயணத்திலிருந்து சில துளிகள் .....

சந்தித்த சிறிது நேரத்தில், தோழர் அன்பளிப்பாய் வழங்கிய பெட்டகம்.

     வாசித்து மலைத்துப் போனேன். இத்துனைச் செய்திகளைத் திரட்ட, எவ்வளவு உழைத்திருக்க வேண்டும், எத்துனை நாள் கண் விழித்திருக்க வேண்டும், எத்துனை நாள் விடுமுறையின்றி, ஓய்வின்றி அலைந்திருக்க வேண்டும். பக்கத்திற்குப் பக்கம் தோழரின் உழைப்பு, முகம் காட்டுகிறது.

      நண்பர்களே, நான் பார்த்த, படித்த மற்ற நூல்களுக்கும், இந்நூலிற்கும், ஒரு வேறுபாட்டை, வித்தியாசத்தை உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.

     இந்நூலில் விலை என்ற வார்த்தையே இல்லை.

     காப்பீட்டுக் கழக ஊழியர்களையும் தாண்டி, பொது மக்களையும், இந்நூல் சென்று சேர வேண்டும் என்பதே, இந்த எளியேனின் விருப்பமாகும்.

தோழர் எஸ்.இராமன் அவர்கள்
பாராட்டிற்கு உரியவர்.


தோழரும், தோழரது இயக்கமும்
சிகரத்தைத் தொட,
சிகரத்தைத் தாண்டியும், தன் எல்லைகளைப் பரப்ப
வாழ்த்துவோம், பாராட்டுவோம்.



      

85 கருத்துகள்:

  1. எஸ். இராமன் ஐயா அவர்களின் உழைப்பு அபாரமானது... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    (அவரின் தள url - http://ramaniecuvellore.blogspot.in/)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      பதிவிலேயே இணைப்பு கொடுத்துவிட்டேன்
      நன்றி

      நீக்கு
  2. அறியவேண்டிய செய்திகள். படிக்க வேண்டிய நூல். பாராட்டப் படவேண்டியவர் நண்பர் ராமன்.
    தம +1

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையும்,அறிவும் எங்கெல்லாம் தெரிகிறதோ அங்கெல்லாம் ஓடிப்போய் அரவணைப்பதாகட்டும்..உச்சியில் தூக்கிவைத்து ஆனந்தக்கூத்து ஆடுவதாகட்டும் உங்களுக்கு நிகரில்லை..
      எல்லாம் இருக்கட்டும்.. உங்கள் பதிவுகளை காப்பீடு செய்துவிடுங்கள்..
      நெடுங்காலம் இருக்கவேண்டியிருக்கும்...அறிமுகப்படுத்திய உங்களுக்கும்...எழுதிய தோழருக்கும் வாழ்த்துக்களும்..நன்றியும்

      நீக்கு
    2. தன்னலம் துறந்து பொது நலம் கருதி உழைப்போரைக் காணும் பொழுதெல்லாம் மனதில் ஓர் மகிழ்ச்சி பிறக்கிறது நண்பரே
      தங்களின் கருத்துரைக்கும்,அன்பிற்கும் மிகுந்த நன்றி நண்பரே

      நீக்கு
  4. அறியாத விடயம் அறிந்துகொண்டேன் ஐயா!

    பகிர்விற்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. இராமன் அவர்களை விழாவில் பார்த்து மகிழ்ந்தேன். இன்னொரு முறை விரிவாக உரையாட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி பதிவர் சந்திப்புகளில் கலந்துரையாடலுக்கு என்று தனியே நேரம் ஒதுக்க வேண்டும் ஐயா
      நன்றி

      நீக்கு
  6. இராமன் அவர்களுடைய பெருமனதையும், உழைப்பையும், நூலையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இத்தகைய பெரியோர்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  7. ராமன் அவர்கள் எங்கள் A I I E A சங்கத்தின் இளந்தாரிகளில் ஒருவர். ஒருமுறை நாகபுரி ரயில் நிலயத்தில் சந்தித்தேன். பின்னர் நாகபுரி மாநாட்டில் சந்தித்த நினவு. சரோஜ் சவுத்திரியும்,சுனிலமைத்ராவும், என்,எம். எஸ் அவ்ர்களும் ஏற்றி வளர்த்த தீபத்தை காத்து வரும் செயல் வீரர்களில் ஒருவர் ராமன் அவர்கள். வாழ்க,வளர்க---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா
      ஏற்றிய தீபத்தை அணையாது காத்துவரும் தோழரைப் போற்றுவோம்
      நன்றி ஐயா

      நீக்கு
    2. தோழா, எல்லாம் நீங்கள் காட்டிய வழியில்தான்

      நீக்கு
  8. காப்பீடுபற்றிய செய்திகளை அறிந்துகொண்டேன்.

    நண்பர் ராமன் அவர்களுக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காப்பீட்டுத் திட்டம் பற்றிய பல பயனுள்ள தகவல்கள்
      அள்ளித் தந்து விழிப்புணர்வு தந்துள்ளீர்கள்.

      அய்யா இராமன் அவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.
      மிக்க நன்றி நண்பரே!
      த ம 7
      நபுடன்,
      புதுவை வேலு

      நீக்கு
  9. முற்றிலும் அறியாத செய்தி! அறியத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் நண்பரே நானும் நண்பர் இராமன் அவர்களின் பதிவுகளை படித்து இருக்கிறேன் விடயங்களை அவர் அலசும் விதம் பிரமிக்க வைக்கும் நல்ல தகவல் தந்த உங்களுக்கு நன்றியும் தோழருக்கு வாழ்த்துகளும்
    தமிழ மணம் 8

    பதிலளிநீக்கு
  11. புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகிறது உங்களின் பருந்துப்பார்வை!

    நூலாசிரியருக்கும் வாழ்த்துகள்.

    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  12. தங்களின் வாசிப்பு அனுபவம் வெகுசிறப்பாக அனைவருக்கும் பயன்படும் விதமாக பதிவுசெய்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. தோழர் எஸ்.ராமன் அவர்களது அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டில்தான் முதன்முதல் அவரைச் சந்தித்தேன்;
    அவர் எழுதிய நூலினைப் பற்றிய தங்கள் அறிமுகம், அந்த நூலினை வாங்கும் ஆர்வத்தை என்னுள் விதைத்துள்ளது. திருச்சி அல்லது தஞ்சையில் விற்பனைக்கு கிடைக்குமா என்பதைத் தெரியபடுத்தினால், விலைக்கு வாங்க ஏதுவாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயக்கத் தோழர்களுக்கான தனிச்சுற்றுக்கு மட்டுமே வெளியிடப் பட்ட புத்தகம் என்று எண்ணுகின்றேன் ஐயா
      ஆனால் பொது மக்கள் அனைவரும் படித்து உணர வேண்டிய நூல்
      நன்றி ஐயா

      நீக்கு
    2. நண்பர் சொன்னது போல தனிச்சுற்றுக்கான புத்தகம்தான். இருப்பினும் கைவசம் சில பிரதிகள் உள்ளது. உங்கள் விலாசத்தை எழுதுங்கள். அனுப்பி வைக்கிறேன்

      நீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சொன்ன எனது கருத்துரை மீண்டும் ஒருமுறை பதிவாகிவிட்டது. மன்னிக்கவும்

      நீக்கு
  15. காப்பீடு பற்றி பல வரலாற்று தகவல்களை தெரிந்து கொண்டேன். வலைப்பதிவர் சந்திப்பில் ராமன் அவர்களை பார்த்தேன். பேசக்கூடிய சூழல் வாய்க்கவில்லை. நூல் அறிமுகத்திற்கு நன்றி!
    ஓட்டுப் பட்டை இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டு அளிக்க இயலா விட்டால் என்ன நண்பரே
      வருகைக்கும் அன்பிற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  16. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய செய்திகளை -
    அழகுறத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      தாங்கள் தஞ்சைக்கு வரும் நாளை
      ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்

      நீக்கு
  17. காப்பீடு பற்றி பல அறியாத தகவல்கள்....ராமன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    அவர்களைச் சந்தித்தோம் ஆனால் உரையாடவில்லை...

    பதிலளிநீக்கு
  18. அடுத்தவரை பாராட்ட மனசு வராத உலகத்தில் சக பதிவரை பாராட்டி ஒரு பதிவு. அருமை. வாழ்த்துக்கல் உங்கள் இருவருக்கும் உங்கள் நட்புக்கும்....

    பதிலளிநீக்கு
  19. பதிவர் சந்திப்பில் பார்த்துப் பேச முடியவில்லை. காப்பீடு என்பதே ஒரு சேமிப்புத் திட்டம் ஆனால் அதில் சேரத் தூண்டுவது நம்முடைய நிலையாமைப் பயமும் நமக்குப் பின் நம் குடும்பம் பற்றிய கவலையும் தான் நல்லதோர் பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. வாழட்டும் அவர்! வளரட்டும் அவர்பணி!

    பதிலளிநீக்கு
  21. தககவற் பதிவு மிக்க நன்று சகோதரா.

    பதிலளிநீக்கு
  22. நல்ல அறிமுகம் சகோ,
    தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. எல்லா தொழிலாளர் சங்கங்களுமே ஆரம்பிக்குமுன் நிறையக் கஷ்டப் பட்டிருக்கிறார்கள் .கஷ்டப்பட்டவர்கள் பலனை அவ்வளவாக அனுபவிக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரியாரே
      கஷ்டப் பட்டவர்களின் பலனை அவரைத் தொடர்ந்துவரும்
      தலைமுறையன்றோ அனுபவிக்கும்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
    2. கண்டிப்பாக. எங்கள் நிறுவனத்திலேயே நாங்கள் அனுபவிக்கும் பல உரிமைகளை எங்கள் முன்னோடிகள் அனுபவிக்கவில்லை. தேவர் மகன் படத்தில் சிவாஜி சொல்லும் பிரபலமான வசனம் நினைவுக்கு வருகிறது. "விதை அவர்கள் போட்டது. அவர்கள் தங்களின் கடமையாகச் செய்தார்கள்"

      நீக்கு
  24. அறியாதன அறியவைத்து
    அறிமுகமும் செய்த விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. அன்பான நண்பரே, வார்த்தைகளில் நன்றி சொல்வது இயலாத காரியம். தங்களின் புகழுரைக்கு பொருத்தமானவன் அல்ல நான். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் மாபெரும் அமைப்பின் ஊழியர்களில் ஒருவன் மட்டுமே. தோழர் காஷ்யபன் சொன்னது போல எங்களின் மகத்தான தலைவர்கள் தோழர்கள் சரோஜ் சவுத்ரி, சுனில் மைத்ரா, சந்திர சேகர் போஸ், என்.எம்.சுந்தரம், ஆர்.பி.மான்சந்தா ஆகியோர் தங்களின் தியாகத்தால் உருவாக்கிய ராஜபாட்டையில் நாங்கள் நடை பயில்கிறோம். இந்தியா முழுதும் நடந்து கொண்டிருக்கும் இயக்கங்களை எங்களது கோட்டத்தில் எப்படி அமலாக்கினோம் என்பதை ஆவணப்படுத்துவதற்கான முயற்சி அது.

    எங்களது கோட்ட செயற்குழு அளித்த அப்பொறுப்பை நிறைவேற்றிய கருவி நான். அவ்வளவுதான்.

    பணிகளை மேலும் உறுதியாக செய்வதற்கு உங்களின் பதிவு உற்சாகம் அளித்திருக்கிறது. பேட்டரி சார்ஜ் ஆகியுள்ளது.

    மீண்டும் மனமார்ந்த நன்றி.

    ஒரே ஒரு ஆதங்கம் இருக்கிறது. அதன் காரணத்தை இன்னும் சில நிமிடங்களில் எனது புதிய பதிவில் அறிவீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னலம் துறந்து
      பொதுநல நோக்கோடு தங்களைப் போல்
      பணியாற்றுபவர்களை காண்பது அரிது அல்லவா
      தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது நண்பரே
      நன்றி

      நீக்கு
  26. பின்னூட்டங்கள் மூலமாக தங்கள் அன்பை பறிமாறிக் கொண்ட அனைத்து நல்லிதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது நன்றியினையும் இணைத்துக் கொள்கின்றேன் நண்பரே

      நீக்கு
  27. மறதியின் காரணமாக நீங்கள் முந்திக் கொண்டீர்கள்

    http://ramaniecuvellore.blogspot.in/2015/10/blog-post_72.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பதிவினைக் கண்டு மகிழ்ந்தேன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  28. மக்கள விரோத கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்து போராடும் நண்பர் இராமனுக்கு வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  29. அன்புள்ள அய்யா,

    தோழர் எஸ். இராமன் அவர்களின் சிகரத்தை நோக்கிய பயணத்திலிருந்து சில துளிகள் ...வேலூர் கோட்டத்தின் 25 ஆண்டுகள்
    – ஒரு அனுபவப் பகிர்வை பகர்ந்து கொண்டதில் காப்பீட்டுத் திட்டங்கள் பல தகவல்கள் - வரலாறுகள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

    நன்றி.
    த.ம.15

    பதிலளிநீக்கு
  30. நீங்கள் நிகழ்வுகளை விபரிக்கும் விதம், ஆட்களை அறிமுகப்படுத்தும் பாணி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் தொடர்பான சம்பவங்களையும் நினைவுக்கு கொண்டு வருகிறது. பெரும் பயன் நிறைந்த திருமிகு. இராமனின் நூலில் விலை குறிப்பிடப்படாத விடயத்தை நீங்கள் விளக்கியதைப் படித்ததும் என் நினைவுக்கு வந்த விடயம்:- இலங்கையில் வவுனியா என்னுமிடத்தில் 81 வயதான திருமதி.பார்வதி நல்லதம்பி அம்மையார் சிறுவர்களுக்கு-இளைஞர்களுக்கு ஏன் பெரியவர்களுக்குக் கூட அறிவு சொல்லும் வகையில் 60 க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட "அனுபவத்தின் ஆதங்கம்" என்ற கவிதை நூலை கடந்த ஆண்டு வெளியிட்டபோது வெளியீட்டு விழாவுக்கு நானும் போயிருந்தேன். இலங்கையில் பெரும்பாலும் நூல்கள் வெளியிடும்போது நூல் வெளியீட்டு விழா என ஒரு நிகழ்வு பெரிதாக இடம்பெறும். முதல் பிரதி சிறப்புப்பிரதி பெறுவோர் மற்றும் வெளியீட்டு நிகழ்வுக்கு வருவோர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விலையை விட கூடிய பணம் கொடுத்தே வாங்குவார்கள் விலை: இலவச வெளியீடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.சமய சமூகத்தொண்டுகளில் ஈடுபடும் பார்வதி அம்மையாரின் மக்கள் மருமக்கள் நூல் அச்சிடும் செலவை ஏற்றுக் கொண்டதாக அறிய முடிந்தது.
    இலவச வெளீயிடு என அறிவித்திருந்தும் பார்வதி அம்மையார் மேல் வைத்திருந்த பெருமதிப்பால் விழாவுக்கு வருகை தந்தோர் அம்மையாரின் கால்களில் விழுந்து வணங்கி பெருந்தொகை பணமும் கொடுத்து நூலைப் பெற்றுக் கொண்டனர்.
    உடனடியாக பார்வதி அம்மையாரும் அவரது மக்கள் மருமக்களும் கூடிக்கதைத்து சேர்ந்த பணம் முழுவதையும் ஆதரவற்ற பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக வழங்க ஒழுங்கு செய்தது விழாவுக்கு வந்தோர் விழிகளில் நீரை வரவழைத்தது. கடந்த பல வருடங்களாக சுமார் 500 க்கு மேற்பட்ட நூல் வெளியீடுகளில் கலந்து கொண்ட என் கண்களிலும் அன்று மட்டும் நீர் வழிந்தது....உடுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி.பார்வதி நல்லதம்பி அம்மையார் அவர்கள் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் ஐயா
      தங்களின் நீண்ட கருத்துரையும், தொடர்ந்து பல பதிவுகளுக்கு தங்களின் வருகையும் வாழ்த்துரையும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
      தங்களின் பல்வேறு அலுவல்களுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கு, இந்த எளியேனின் வலைப் பூவிற்கு வருகை தந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினையும் வணக்கங்களையும் தெரிவித்து மகிழ்கின்றேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  31. தோழர் இராமன் அவர்களின் சிறப்பான நூலினை அறிமுகம் செய்தவிதம் அருமை! பாராட்டுக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  32. வணக்கம்
    ஐயா
    அறியாத நூல் பற்றியும் அறியாத முகம் பற்றியும் தங்களின் கருத்தில் சொல்லிய விதம் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா த.ம 15
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  33. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    தோழர் திரு.இராமர் அவர்களின் உழைப்பினாலும் அவர் சார்ந்த இயக்க தோழர்களின் உழைப்பினாலும் சிறிது சிறிதாக காப்பீடு ஊழியர்கள் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வாழ்த்துவோம். அவர்களின் உழைப்பை பாராட்டுவோம். தங்களின் இந்தப் பதிவும் மிக அற்புதமாக அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  34. தெரியாத பல செய்திகள் தெரிந்துகொண்டேன்.. பதிவிற்கு நன்றி அய்யா..

    பதிலளிநீக்கு
  35. நல்லதொரு நூல் பற்றிய அறிமுகம். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  36. உங்களுக்கு நான் கருதெல்லாம் போட முடியாத பொடியள்...என் வலை தளம் பார்க்க வாங்க அங்கிள்...http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  37. ஒருவரை எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்? ஏன்? அவர் என்ன தகுதி பெற்றார்? என்பதை தெளிவாக அழகாக, சொல்லும் நேர்த்தியோடு புகைப்படங்களோடும் த்ந்துள்ளீர்கள். அருமை..நன்றி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் அங்கிள்...நேரமே இல்லாமல் தான் எழுத முடியலை. இப்பவும் உங்க பிளாக் பாத்தே ஆகணும்னு கட்டாயமா வந்துட்டேன் என் பிளாக் பாருங்க. ஏதாவது சொன்னா என்னை வளத்துக்குவேன்ல.http://sakthiinnisai.blogspot.in/2015/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  39. மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம். தங்களது பதிவு கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டேன்.நன்றிங்க.எனது பணிச்சூழல் காரணமாக எனது பதிலுரைக்கு தாமதமாகும் என வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  40. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு