அத்தியாயம்
3 கவர்னர் லாட்டீ காட்
ஆங்கிலேய கவர்னர் லாட்டீ காட், தனது அரண்மனையில் குறுக்கும்
நெடுக்குமாக நடந்து கொண்டேயிருக்கிறான். முகமெங்கும் வெறுப்பு மண்டிக் கிடக்கிறது.
சில நாட்களுக்கு முன், தனக்கு நேர்ந்த அவமானத்தை, அவனால் தாங்கிக் கொள்ள
முடியவில்லை.
ஒரு சிறு பெண், தன்னை என்ன பாடு
படுத்திவிட்டாள்? சும்மா விடக்கூடாது அவளை? மனதில் கறுவுதலோடு அங்கும் இங்கும் நடக்கிறான்,நடக்கிறான், நடந்து கொண்டே இருக்கிறான். அன்று நடைபெற்ற நிகழ்வு மீண்டும், மீண்டும் அவன் மனத் திரையில், ஓடிக் கொண்டே
இருக்கிறது.
---
![]() |
சிவகங்கை அரண்மனை |
சிறிது நேரத்தில் சிவகங்கை மன்னர் முத்து
வடுகநாதர் உள்ளே நுழைகிறார்.
நாற்காலியில் மேலும் பின்னோக்கி சாய்ந்து,
இடது காலின் மேல், இருக்கும் வலது காலினை ஆட்டியபடியே, அதிகாரத் தோரணையில்
பேசுகிறான் கவர்னர் லாட் டீ.
மிஸ்டர் முத்து
வடுகநாதர், நீர் எமக்குக் கொடுக்க வேண்டிய வரியை, வெகு காலமாக கட்டவில்லை. ஏன்?
விளக்கம் தேவை?
மன்னருக்கு
ஆங்கிலம் தெரியாது,
கவர்னருக்கோ
தமிழ் தெரியாது.
கவர்னருடன்
வந்த மொழிபெயர்ப்பாளனோ, கைகட்டி, வாய் பொத்தி ஓரமாய், அமைதியாய் நிற்கிறான்.
மன்னரின் குழப்பத்தைக் கண்டும், தனது
பேச்சினை புரிந்து கொள்ள முடியாத, இயலாமையைக் கண்டும், கவர்னரின் கண்களில் ஒரு
எகத்தாளச் சிரிப்பு. ஆங்கிலம் தெரியாதா உனக்கு? என்னும் ஒரு கேலிப் பார்வை.
எங்களை நத்திப்
பிழைக்க வந்த நீங்கள்தான், எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர,
நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஒரு நிமிடம்தான், ஒரே நிமிடம், வாரி
சுருட்டிக் கொண்டு, தன்னையும் அறியாமல் எழுந்து நிற்கிறான் லாட் டீ.
யார் இவள்? என்
மொழியில், ஆங்கிலத்தில், வீர முழக்கமிடுகிறாரே யார் இவள்? புரியவில்லை அவனுக்கு.
உனக்கு
ஆங்கிலம் மட்டும்தானே தெரியும்? இதோ, இப்பொழுது நான் பேசியதை, தெலுங்கில்
சொல்கிறேன் கேள்.
கவர்னர்
விழித்தான்.
இதோ,
மலையாளத்தில் சொல்கிறேன் கேள்.
கவர்னரின்
விழிகள் வியப்பால் விரிந்தன.
இதோ
கன்னடத்தில் கூறுகிறேன் கேள்.
லாட் டீ
தவிக்கத் தொடங்கினான்.
இதோ உருதுவில்
கூறுகிறேன் கேள்.
அறையை விட்டு
வெளியே ஓடிவிடலாமா? என்ற எண்ணம் லாட் டீயின் மனதில் நுழைந்தது.
ஒரு
பெண்மணிக்குள், இத்தனை மொழிகள் அடைக்கலமா?
கம்பீரமாக
அமர்ந்திருந்த கவர்னர், இப்பொழுது கைகட்டி நிற்கின்றான்.
இது எங்கள்
மண். எங்கள் நாடு. எங்கள் மக்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும், ஒவ்வொரு அணுவும்,
எங்களின் உழைப்பைச் சொல்லும.
எங்கள்
மக்களின் உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும் உருவானது எங்கள் நாடு.
இங்கே ஓடுகின்ற
நதிகளும், நிற்கின்ற மரங்களும், வீசுகின்ற காற்றும், அடிக்கின்ற வெயிலும்,
பெய்கின்ற மழையும் எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்.
அன்புக்கு
எங்கள் தலை என்றும் குனியும், ஆணவத்தோடு நெருங்கினால், தலை மண்ணில் உருளும்.
எங்கிருந்தோ
பிழைக்க வந்த நீ, எங்களிடமே வரி கேட்கின்றாயா? வரி கொடுத்து எமக்குப் பழக்கமில்லை.
உதவி என்று
கேள், வாரி வாரி வழங்குகின்றேன். இனியொரு முறை, வரி என்று கேட்டால், வரி கேட்டு
வருபவனுக்கு வாயே இருக்காது.
வேலு நாச்சியார் ஆங்கிலத்தல் முழங்கி முடித்த
பின்பும், வெகுநேரம், கவர்னரின் காதுகளில், வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே
இருந்தன.
இனியும் இங்கே நின்றால், உயிரும் மிஞ்சாது
என்பதை அறிந்த கவர்னர், வேகமாய் அரண்மனையை விட்டு வெளியேறினான்.
---
அன்று சிவகங்கை அரண்மனையை விட்டு, வேகமாய்
ஓடி வெளியே வந்தவன், இன்று, இதோ, இங்கே, அடிபட்ட வேங்கையாய், குள்ள நரித் தனத்துடன்
குறுக்கும், நெடுக்குமாய் உலாவிக் கொண்டே இருக்கிறான்.
செய்தியொன்றும் வரவில்லையே? என தவித்தபடி
நடந்து கொண்டே இருக்கிறான்.
பணியாள் ஒருவன்
அறைக்குள் நுழைய,
என்ன?
மன்னர் முத்து
வடுகநாதரும், கவுரி நாச்சியாரும் சுட்டுக் கொள்ளப் பட்டு விட்டார்கள்.
சபாஷ். என்னை
எதிர்த்துப் பேசினாரே, நாச்சியார், அந்த வேலு நாச்சியார் அவர் என்னவானார்?
வேலு
நாச்சியார் கோயிலுக்கு வரவில்லையாம்.
என்ன, வேலு
நாச்சியார் கோயிலுக்கு வரவில்லையா? விடாதீர்கள்? வேலு நாச்சியார் எங்கிருக்கிறார்
என்று வலை வீசித் தேடுங்கள். வெட்டி வீசுங்கள், சுட்டுப் பொசுக்குங்கள். அவரும்
கொல்லப்பட்டார் என்ற செய்தி வர வேண்டும் எனக்கு.
புறப்படு, என் உத்தரவைச்
சொல். வேலு நாச்சியாரின் உயிர் வேண்டும் எனக்கு.
தொடரும்.
பல மொழிகளில் வீர முழக்கம் சிறப்பு... தொடர்கிறேன்...
பதிலளிநீக்குஅன்று நடந்தவை - பிரம்மாண்டமாக கண் முன்னே விரிகின்றன.
பதிலளிநீக்குராணி வேலு நாச்சியாரின் கர்ஜனை - வீரம் விளைவிக்கின்றது!..
ஆனாலும் அந்த வீரமங்கையையும் - வஞ்சனை வீழ்த்தியதே..
தொடர்கின்றேன்.. ஐயா!..
ஆங்கிலேயர்கள் வஞ்சனையால்தானே நம்மை அடிமைப் படுத்தினர்.
நீக்குவேலு நாச்சியாரின் வீரம் நிகரற்றது ஐயா
ஆனாலும் நம்மவர்கள் அவரை மறந்ததுதான் சோகம்
நன்றி ஐயா
பல மொழி முழக்கம் உண்மைதானா ,உயர்வு நவிற்சியா ?நம்ப முடிய வில்லை !
பதிலளிநீக்குத ம 2
உயர்வு நவிற்சி இல்லை நண்பரே
நீக்குவரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப் பெற்ற உண்மை
வேலு நாச்சியார் பன்மொழி வித்தகர்
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், உருது என ஐந்து மொழிகளை கசடறக் கற்றவர். இதுமட்டுமல்ல, தனது கடைசி காலத்தில் தனது உடல் நலம் தளர்ந்து, மருத்துவம் பார்த்துக் கொண்ட வேளையில் கூட, பிரஞ்சு மொழியைக் கற்க முற்பட்டவர்தான் வேலு நாச்சியார்
சுருங்கக் கூறுவதானால்
வேலு நாச்சியார் மொழிகளின் காதலர்
நன்றி நண்பரே
வேலு நாச்சியாரின் வீரத்தை நேரடியாக எதிர்கொள்ளாமல் என்னவொரு பேடித்தனம்.
பதிலளிநீக்குஅசல் பேடித்தனம்தான் நண்பரே
நீக்குநன்றி
நல்ல எழுத்து வடிவம் சார்.முன்னராய் கதையைச்சொல்லிவிட்டு பின்னாராய் அதற்கான உட்பொதிவைச்சொல்லிச்செல்வது,நன்றாக இருக்கிறது தொடர்ச்சியாய் படித்துச்செல்வதற்கு/வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குநன்றி நண்பரே நன்றி
நீக்குஅருமையான படைப்பாக வளர்கிறது ...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அய்யா
தமிழ் மனம் மூன்று
நன்றி நண்பரே
நீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குவிறுவிறுப்பான நடையில் வேலு நாச்சியாரின் வீரத்தை பதிவிட்டு அதிர வைத்த தங்களின் அழகானப் பதிவிற்கு பாராட்டுகள். தொடருங்கள்... நாங்களும் தொடர்கிறோம்.
நன்றி நண்பரே
நீக்குஅருமையான தொடர் பதிவு! நண்பரே! பல தகவல்கள் பிரமிப்பாக இருக்கின்றது! தொடர்கின்றோம். நண்பரே!
பதிலளிநீக்குவேலு நாச்சியார் பற்றிய பல செய்திகளை
நீக்குகாலப் போக்கில் காற்றில் கரைந்து விட்டன
நன்றி நண்பரே
நன்றாக கதை சொல்லுகிறீர்கள் ஜெயக்குமார் சார். தொடருங்கள், தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவெகு விருவிருப்பாய் செல்கிறது பதிவு!! இது உங்கள் எழுத்தின் வீச்சுக்கு என்றென்றும் அடையாளமாய் விளங்கபோகிற தொடர்!!! அட்டகாசம் அண்ணா!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குவேலு நாச்சியார் பன்மொழிப் புலவர் என்னும் செய்தியை இப்போதே அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
நன்றி ஐயா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅருமையான வரலாற்றுப்பதிவு.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பரே
நீக்குஒரு பெண்மணிக்குள், இத்தனை மொழிகள் அடைக்கலமா?
பதிலளிநீக்குவியக்கவைக்கும் முழக்கம்
வியப்பிற்குரிய பெண்மணிதான் வேலு நாச்சியார்
நீக்குநன்றி சகோதரியாரே
இங்கே ஓடுகின்ற நதிகளும், நிற்கின்ற மரங்களும், வீசுகின்ற காற்றும், அடிக்கின்ற வெயிலும், பெய்கின்ற மழையும் எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்.
பதிலளிநீக்குஆஹா படிக்கும்போதே சிலிர்க்கிறது நண்பரே....
தொடர்கிறேன்... நண்பரே மன்னிக்கவும் நேரமின்மை விரிவாக எழுத முடியவில்லை.
த.ம.7
தங்கள் வலை மற்றும் வலைச் சரம் என்னும் இரட்டைக் குதிரையில் அநாசாயமாக சாவாரி செய்கிறீர்,
நீக்குநேரமிருப்பது கடினம்தான் நண்பரே
நன்றி
உங்கள் நடை மிகச்சிறப்பானது கரந்தையாரே!
பதிலளிநீக்குகண்களில் அப்படியே காட்சியை விரித்துக் கொண்டு போகிறது உங்கள் எழுத்து.
தங்களைத் தொடர்கிறேன்.
த ம கூடுதல் 1
நன்றி நண்பரே
நீக்குவேலுநாச்சியாரின் கதையை அழகாய் சொல்கிறீர்கள்.
பதிலளிநீக்குஎத்தனை மொழிகளில் திறமை !
வீர பெண்மணியின் பெருமையை படிக்கத தரும் உங்களுக்கு நன்றி.
நன்றி சகோதரியாரே
நீக்குகதை சிறப்பாக செல்கிறது! உங்களின் வாயிலாக வேலு நாச்சியாரின் கர்ஜனை எங்களின் மனதிலும் புகுந்து கொண்டது! தொடருங்கள்!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குவரலாறு மிக முக்கியம். பல ஆச்சரியங்கள். தொடர்ந்து படிக்க ஆவலாய்உள்ளேன்
பதிலளிநீக்குதங்களின் வரவு மிகுந்த மகிழ்வினை அளிக்கிறது ஐயா
நீக்குநன்றி
good work,good leads
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅற்புதமான நடை! அரிய தகவல்கள்! தொடருங்கள் நண்பரே! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குத.ம 11
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவேலு நாச்சியார் குறித்து மிக அற்புதமான பகிர்வு ஐயா...
பதிலளிநீக்குசிவகங்கைச் சீமையின் வீர வேங்கையின் கதையை அழகாக எடுத்துச் செல்கிறீர்கள்... மிக்க நன்றி.
நன்றி நண்பரே
நீக்குஆஹா அடிக்கடி வரமுடியாமை ..தொடரவிட்டு போச்சே ம்ம் முதல் இருந்து படித்துவிட்டு கருத்திடுகிறேன்
பதிலளிநீக்குநன்றி
பதிவின் மேலே மற்ற இரு அத்தியாயங்களுக்கும் இணைப்பு கொடுத்துள்ளேன் நண்பரே
நீக்குநன்றி
மிக மிக நன்று
பதிலளிநீக்குவாசித்தேன்.
நன்றி
வேதா. இலங்காதிலகம்:
நன்றி சகோதரியாரே
நீக்குபலமொழி வித்தகி எனலாம் வேலுநாச்சியாரை. தொடரட்டும் தொடர்.
பதிலளிநீக்குபலமொழி வித்தகிதான் நண்பரே
நீக்குநன்றி
பன்மொழி அறிவு, துணிவு, மனத்திடம் உள்ளிட்ட பல அரிய குணங்களை வேலு நாச்சியாரிடம் காணமுடிகிறது. அதற்குக் காரணம் உங்களது எழுத்துத் திறனே. தொடருங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குமெய் சிலிர்க்க வைக்கும் வீரக் கதை.வேறா நாச்சியாரின் துணிவு வியக்க வைக்கிறது. அற்புதமான நடையில் வரலாற்றுத் தொடர். நன்றி ஜெயகுமார் சார்
பதிலளிநீக்குமெய் சிலிர்க்கச் செய்யும் வாழ்வினை வாழ்ந்தவர்தான் வேலு நாச்சியார்
நீக்குநன்றி ஐயா
அன்புள்ள ஜெயக்குமார்.
பதிலளிநீக்குவணக்கம். நமது பண்பாட்டு மரபை நினைவுபடுத்தும் அற்புதமான தொடர் உங்களின் எளிமையான நடையில் உள்ளம் களிக்கக் கூறுகிறீர்கள். பிறமொழி சாத்திரங்கள் தமிழ்மொழியிலே பெயர்த்தல் வேண்டும் என்கிற பாரதியின் வரிகளைச் செவிமடுக்காத அரசியல் தன்னின் அடிமைகளுக்குத் தமிழைத் தவிர வேறு எதையும் கற்காதே என்று துர்ண்டிவிட்டுத் தன்னுடைய வாரிசுகளை எல்லாம் கற்கவைத்துவிட்டு இன்றும் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிற சூழலில் பன்மொழிப்புலமையில் வீரமுழக்கமிட்ட வேலுநாச்சியாரின் கால்கள் தொட்டு வணங்குவோம். அடுத்து தமிழுக்கு நல்ல வரலாற்றுப் புத்தகம் கிடைத்திருக்கிறது. தொடரை முடித்தவுடன் உடன் நுர்லாக்குங்கள். அடுத்தடுத்து இதுபோன்ற வரலாற்று வரிசைகளைத் தெரிவு செய்து எழுதுங்கள். ஐந்தாண்டுகளாகத் திட்டமிட்டு ஒரு வரலாற்று நாவல் எழுதவேண்டும் என்று தொடங்கி 50 பக்கங்களோடு நின்றிருக்கிற எனது ஆசைக்கு நெய் வார்த்து விட்டு சுடர் ஏற்றியிருக்கிறீர்கள். நன்றி. நிறைய எழுதவேண்டும் நீங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கருவிக்கொண்டு அல்ல கறுவுதல் என்பதுதான் சரி.
மிக நீண்ட கருத்துரைக்கும், வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குகருவிக் கொண்டு என்ற வார்த்தையினை மாற்றம் செய்துவிட்டேன் ஐயா
சுட்டிக் காட்டியமைக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன் ஐயா
மெய்சிலிர்க்கிறது அம்மையாரின் வீர முழக்கம். ஹரணி சார் சொல்வது போல தொடரை நூலாக்குங்கள். வாழ்த்துக்கள் சகோதரருக்கு.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குமிக அருமை.தமிழ் மண்ணிண் வீரம் தமிழனுக்கே உரியது.வேலுநாட்சியாரின் வீரம் தொடரட்டும்.பின் தொடற்கிறேன்.மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதொடர் ... நல்ல விறுவிறுப்பு. உங்கள் படைப்புகளின் வரிசையில், இந்த தொடரும். ஒரு நூலாக வெளி வரவேண்டும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
த.ம.14
அவசியம் நூலாக கொண்டு வருகின்றேன் ஐயா
நீக்குநன்றி
தொடர்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குதமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல, அது நம் அடையாளம், தமிழ் தான் வேர், மற்ற மொழிகள் அதன் விழுதுகள் தான். அன்பக்கு எங்கள் தலை என்றும் குனியும், ஆணவத்தோடு நெருங்கினால், தலை மண்ணில் உருளும். எத்துனை உறுதியான வார்த்தைகள். வேலுநாச்சியாரின் மொழி ஆளுமை மற்றொரு இடத்திலும் உண்டு போலும். காத்திருக்கிறேன்.மருத்துவம் பார்த்துக் கொண்ட வேளையில் கூட, பிரஞ்சு மொழியைக் கற்க முற்பட்டவர்தான் வேலு நாச்சியார். எனக்கு இது புது தகவல். நன்றி.
பதிலளிநீக்குவெலு நாச்சியாரின் மொழி ஆர்வம் அளவிடற்கரியது.
நீக்குநன்றி சகோதரியாரே
வீர வரலாறு உணர்ச்சி கொப்புளிக்க சொல்கிறீர்கள் அருமை அய்யா . பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅன்பக்கு எங்கள் தலை என்றும் குனியும்////
பதிலளிநீக்குஅன்புக்கு - மாறி விட்டது
எழுத்துப் பிழையினைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பரே
நீக்குதிருத்தி விட்டேன்
வியாபாரம் செய்ய வந்தவன்தான் நமது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அதை விடுத்து நம்மை அவனது மொழியை கற்றுக் கொள்ள வைத்தானே....? இந்தியர்கள் எத்தனை மூடர்களாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும்?. நாச்சியரின் கருத்துதான் எனது கருத்தும். இக் கருத்து பல வருங்களாக என்னுள் ஊறிக் கிடக்கிறது அய்யா!.
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா.
நீக்குபெரும் மூடர்களாகத்தான் இருந்திருக்கின்றோம்.
அவன் மொழியினைக் கற்றுக் கெர்ண்டு, அவனுக்கு கணக்குப் பள்ளை வேலை பார்க்க, அவன் உருவாக்கிய கல்வி முறையை பயின்று கொண்டு, அன்று மட்டுமல்ல இன்றும், அதே கல்வி முறையை விடாபிடியாகப் பிடித்துக் கொண்டு......
வரலாற்றை ஒரு விறுவிறுப்பான நாவலைப்போல எழுதும் பாணி அனைவருக்கும் அமையாது !
பதிலளிநீக்குஉங்களின் அடுத்த நூல் அப்படி அமைந்து, " வந்தார்கள் வென்றார்கள் " விற்பனையை முறியடிக்க வேண்டும். இது எனது உண்மையான ஆசை.
நன்றி
சாமானியன்
வேலுநாச்சியாரின் மொழியறிவும் வீரமும் சிலிர்க்க வைக்கின்றன அண்ணா. உங்கள் பதிவை முகநூலிலும் என் நண்பர்களுடனும் பகிர்ந்துள்ளேன். நன்றி அண்ணா.
பதிலளிநீக்குத.ம. 16
கரந்தையாருக்கு என் வணக்கங்கள்! வீர மங்கை வேயி நாச்சியார் பற்றிய பதிவு காட்சியை கண்முன் விவரிக்கிறது! ஆழ்ந்த நல்லுணர்வுடன் படைத்தால் தான் இப்படி நிகழும்! நடை அற்புதமான எளிய நாலக நடை! இப்படிப்பட்ட படைப்புகள்தான் வளர் இளம் தலைமுறைக்கு நல்ல உரமூட்டும்....இனி தங்களின் படைப்பிற்கு நானும் ஒரு ரசிகன்! வாழ்த்துகள் தொடரட்டும் தங்களின் படைப்புப் பணி!
பதிலளிநீக்குஅவசர பதிவானதால் எழுத்துப்பிழைகளை கவனிக்க இயல்வில்லை....மன்னிக்கவும்!வேலு நாச்சியார் , நாடக நடை என திருத்தி வாசிக்கவும்!
பதிலளிநீக்குஇன்று வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாள்.25.12.14 ...என் தாயின் நினைவுகளை மீட்டெடுக்கும் உங்களுக்கு என் வணக்கம் சகோ
பதிலளிநீக்குஎவ்வளவு மன வைராக்கியம் உடையாளிடம் இருந்தது. தன் உயிர் உடலை விட்டுப் பிரிந்தாலும் வேலு நாச்சியாரைக் காட்டிக் கொடுக்காத தைரியம் எல்லோருக்கும் வராது. தொடர்கின்றேன்
பதிலளிநீக்குசூதானமாக இருக்கவும்...
பதிலளிநீக்குசுட்டுவிட்டார்கள்
Visit W3Schools.com!
வேலு நாச்சியார் ! WELL DONE வேலு நாச்சியார் !.....................உடுவை
பதிலளிநீக்கு