20 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 4


 அத்தியாயம் 4 உடையாள்


வேலு நாச்சியாரைக் கண்டதும், காளையார் கோயில் மக்கள் கதறி அழுதனர். எங்கு பார்த்தாலும் மனித உடல்கள். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.

      குதிரையில் இருந்து இறங்கிய வேலு நாச்சியார், முத்து வடுகநாதரும், கவுரி நாச்சியாரும் இரத்தத்தில் குளித்து, உயிரற்று கிடப்பதைப் பார்த்தார்.

      வேலு நாச்சியாரின் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. வஞ்சகமாக மறைந்திருந்து கொன்ற ஆங்கிலேயர்களைப் பழிவாங்க வேண்டும், இப்பொழுதே, வாளேந்திப் போரிட்டு அழித்திட வேண்டும் என உள்ளம் துடியாய்த் துடித்தது. ஆனாலும் இறுதிச் சடங்கினைச் செய்ய வேண்டுமல்லவா?


       மன்னரையும், இளையராணியையும் அடக்கம் செய்வதற்கு, உரிய இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது. மன்னரும், இருவரும் ஒன்றாகக் கிடத்தப்பட்டு, சந்தனக் கட்டைகளால் மூடப் பட்டனர். நெய் ஊற்றி சந்தனக் கட்டைகள் நனைக்கப் பட்டன. வேலு நாச்சியார் தீ மூட்டினார்.

     கொழுந்து விட்டு எரியும், சந்தனக் கட்டைகளையே, வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்த, வேலு நாச்சியாரின் அருகில் வந்தார், அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை.
     
கௌரி நாச்சியார் அடக்கம் செய்யப் பெற்ற இடம்

மன்னர் முத்து வடுகநாதர் அடக்கம் செய்யப்பெற்ற இடம் அருகிலேயே கௌரி நாச்சியார்
அடக்கம் செய்யப்பெற்ற இடம
தாயே, சிவகங்கைச் சீமை வெள்ளையர் வசமாகிவிட்டது. நமக்கு விருப்பாட்சிதான் பாதுகாப்பான இடம். அங்கு செல்லுங்கள். வெள்ளையர்கள், தங்களைத் தேடிக் கண்டுபிடித்து, தீர்த்துக் கட்ட பல் குழுக்களை, பல்வேறு இடங்களுக்கும் அனுப்பியுள்ளனர். உடனே புறப்படுங்கள்.

      வேலு நாச்சியார் குதிரையில் ஏறி தனித்துப் புறப்பட்டார். அரியாக்குறிச்சி அய்யனார் கோயிலைக் கடக்கும்போதுதான் கோயில் தூணில் சாய்ந்தபடி, அழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த, அந்த உருவத்தை வேலு நாச்சியார் கவனித்தார்.

      உடையாள் அல்லவா? இங்கே ஏன் அமர்ந்திருக்கிறார்? என எண்ணியபடியே குதிரையை நிறுத்தினார்.

     குதிரையின் குளம்படி ஓசை கேட்டு, சுய நினைவிற்கு வந்த உடையாள், வேலு நாச்சியாரைக் கண்டதும் பதறி எழுந்தார்.

தாயே, தங்களுக்கா இந்த நிலை எனக் கதறியவர்,

தாயே, அந்தப் பக்கம் போகாதீர்கள். அங்கே வெள்ளையர்கள் பலர், தங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பக்கம் செல்லுங்கள் என்றார்.
---
உடையாள்

     சில மாதங்களுக்கு முன், இதே அரியாக்குறிச்சி அய்யனார் கோயிலில்தான், முதன் முறையாக, உடையாளை, வேலு நாச்சியார் பார்த்தார். பார்த்தார் என்பது கூட சரியில்ல, கேட்டார். ஆம் உடையாளின் அழு குரலைக் கேட்டார்.

     அழு குரல் வந்த திசையைப் பார்த்தபோதுதான், உடையாள், அய்யனார் கோயில் தூணில் கட்டப்பட்டுக் கிடந்த காட்சியைக் கண்டார். விரைந்து அருகில் சென்று கட்டுக்களை அவிழ்த்தார்.

     தாயே, என் பெயர் உடையாள். நான் இங்கே மாடுகளை மேய்ப்பது வழக்கம். இன்றும் அவ்வாறு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, சில திருடர்கள், என்னைக் கட்டிப் போட்டுவிட்டு, எனது மாடுகளைக் களவாடிச் சென்று விட்டனர். எனது திருமணச் செலவிற்காக, வளர்க்கப் பட்ட மாடுகள் அவை என்று கூறி அழுதார்.

     வேலு நாச்சியார், உடையாளின் கண்ணீரைத் துடைத்தார். தன் கழுத்தில்  கிடந்த, தங்கச் சங்கிலியைக் கழற்றி, உடையாளின் கழுத்தில் அணிவித்தார்.

     உன் திருமணத்திற்கு, என் சீதனம் இது. கலங்காமல் வீட்டிற்குச் செல். உன் மாடுகள், நாளை உன் வீடு தேடி வரும்.

---

     தனது திருமணத்திற்கு உதவிய , வேலு நாச்சியார், தனது கணவரை இழந்து விட்டாரே என்ற கவலையில் கரைந்து கொண்டிருந்த உடையாள், வேலு நாச்சியார் செல்ல வேண்டிய திசையைக் காட்டி, வழி அனுப்பிவிட்டு, அவர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நிற்கின்றார்.

      வேலு நாச்சியாரின் குதிரை, பறந்து சென்று மறைந்த, சில நிமிடங்களில், ஏழெட்டுக் குதிரைகள் அவ்விடம் வந்தன. ஒரு வெள்ளைக் காரனும், சில அடியாட்களும்.

இந்தப் பக்கம் வேலு நாச்சியாரைப் பார்த்தாயா?

பார்த்தேன்.

என்ன, பார்த்தாயா? அவர் எந்த பக்கம் சென்றார் சொல். சீக்கிரம் சொல்.

முடியாது.

அடுத்த நொடி, உடையாளின் கன்னத்தில், இடியென ஓர் அடி விழுந்தது. மறு நொடி கன்னம் வீங்கத் தொடங்கியது.

ஒழுங்காகச் சொல்லிவிடு, மறுத்தால், உன் உடலில் உயிர் இருக்காது.

சொல்ல முடியாது

இருவர் குதிரையில் இருந்து கீழே குதித்தனர். ஒருவன் உடையாளின் முடியைப் பிடித்து தர தர வென இழுத்துக் கீழே தள்ளினான். மற்றொருவன், ஓங்கி உடையாளின் வயிற்றில் மிதித்தான்.

சொல்ல முடியாது

மீண்டும் பலங் கொண்ட மட்டும், வயிற்றில் உதைத்தான். உடையாள் தரையில் விழுந்த மீனாகத் துடித்தாள்.

சொல்ல முடியாது

ஒருவன் வாளை உருவினான், ஓங்கினான். அவனைப் பார்த்து, அந்த வேதனையிலும், உடையாள் சிரித்தாள்.

சொல்ல முடியாது

வேகமாய் வாள் கீழே இறங்கியது. ஒரே நொடிதான், உடையாளின் தலை, உடலை விட்டுத் தனியே, தரையில் உருண்டோடியது.

     தனித்துக் கிடந்த உடையாளின் முகத்தில் ஓர்  அமைதி, ஓர் ஆனந்தம், ஓர் நிறைவு.


                                                              ... தொடரும்

67 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே
      உடையாள் போற்றப்பட வேண்டியவர்

      நீக்கு
  2. உண்மை உயிரை விட மனதிற்கு நிறைவு தரும்...

    பதிலளிநீக்கு
  3. ஒருபுறம் விறுவிறுப்பு, மறுபுறம் வேதனை. சொற்களில் உணர்வுகளைக் கொண்டுவரும் தங்களது எழுத்துக்கள் மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இந்த வீரப்பெண்களை வெளிக்கொணரும் உங்களுக்கு நன்றி அண்ணா..தொடருங்கள்.
    புத்தகமாக வெளிவர வேண்டும் அண்ணா..வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. மனது வேதனை அடைகிறது. னம் மக்கள் எப்படி ஆங்கிலேயரை எதிர்த்து போராடியிருக்கின்றார்க்ள். ஆனால் வரலாற்றில் பேசப்படுவது நமக்குத் தெரிந்தது எல்லாம் வடக்கிலிருந்து....அவர்களுக்கு இணையாக தென்னகத்தவர்களும்...தாங்கள் இதை முன்னிறுத்துக் கொண்டு செல்வது மிக அருமை நண்பரே! தொடர்கின்றோம்...மனதில் வேதனை மிகுந்தாலும், வீரம் வியக்க வைக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கைப் படித்துப் படித்து
      தெற்கை மறந்துவிட்டோம் நண்பரே
      நன்றி நண்பரே

      நீக்கு
  6. தண்ணீர் விட்டா வளர்த்தோம்!.. - என்றார் மகாகவி பாரதியார்..

    எப்படியெல்லாம் நமது உறவுகள் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.. - வந்தேறிகளால்!..

    கண்கள் கலங்குகின்றன - ஐயா..
    கையெடுத்து வணங்குகின்றேன் - சிவகங்கைச் சீமையை நோக்கி!..

    பதிலளிநீக்கு
  7. எத்தனை எத்தனை! உண்மைகள் வெளிகொணரப்படுகின்றன. தொடருங்கள் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல முகிழ்க்கும் அரும்பு இப்பதிவு.

    ........விரைவில் உங்களிடமிருந்து நல்ல நவீனம் அரும்பி மலரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

    வளர்க

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா20 டிசம்பர், 2014

    உடையாளின் திண்மை மனம் தெரிந்தது.
    தொடருங்கள் இனிய வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. some times life fulfils with death and sacrifice like Udaiyaal to Velu Nachiyar here..good track.well display. thanks vanakkam.

    பதிலளிநீக்கு
  11. படித்தேன், கொதித்தேன், வேதனை அடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  12. இதெல்லாம் படித்ததில்லை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர வேங்கை வேலு நாச்சியார் பற்றி அருமையாகச் சொல்லி வருகிறீர்கள் ஐயா...
    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
  14. உடையாளின் தியாகம் வியக்க வைக்கிறது. தலைவணங்க சொல்கிறது.
    வேலுநாச்சியாரின் மேல் அன்பு கொண்ட உள்ளங்களை பற்றி தெரிந்து கொண்டேன்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலை வணங்கச் செய்யும் தியாகம்தான் உடையாள்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  15. மூடிய பக்கங்கள் உங்களினால் அறிகின்றேன் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஒரு வீர வரலாற்றின் தெரியாத தகவல்களை எல்லாம் தெரிந்து கொண்டு வருகிறேன். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  17. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    மிகவும் உணர்ச்சிகரமான பதிவாக இந்தப் பதிவு அமைந்துள்ளது. வேலு நாச்சியார் வ்சம் நன்றி காட்டிய உடையாள் என்ற பெண்ணால் மாதர்குலமும் நம் பாரத நாடும் பெரும் புகழ் பெறுகிறது.

    பதிலளிநீக்கு
  18. வேலுநாச்சியார் சரித்திரம் சிலிர்க்க வைக்கிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  19. பகுதி 3 மட்டும் 4 இரண்டையும் இப்போது தான் படித்தேன்.....

    என்ன ஒரு வீரம் அவருக்கு. அவருக்காக உயிரிழந்த உடையாள் நினைத்து மனம் பதறுகிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. மனம் கணத்து விட்டது நண்பரே,,,,
    தமிழழ் மனம் 8

    பதிலளிநீக்கு
  21. ஒவ்வொரு வாரத்தையும் எதிர் பார்க்கத்தூண்டுகிரது தொடரின்நடை
    தொடர்கிறேன் சகோ.

    பதிலளிநீக்கு
  22. தொடர் நல்ல விறுவிறுப்பு. தாங்கள் இணைக்கும் படங்கள் தொடருக்கு வலு சேர்க்கும் ஆவணங்கள். நீங்கள் உடையாளை அறிமுகம் செய்யும்போது அவர் ஆண் என்றே நினைத்தேன். பின்னர் // உடையாள் தரையில் விழுந்த மீனாகத் துடித்தாள்.// என்ற செய்தியினை படித்த போதுதான் அவர் பெண் என அறிந்து கொண்டேன்.
    த.ம.9

    பதிலளிநீக்கு
  23. அண்ணாத்தே இந்த உடையாள்தான் இப்போது வெட்டுடயாள் காளி என்று வணங்கப் பட்டு வருகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடையாள் வணங்குதற்கு உரிய தெய்வம்
      இப்பொழுது தெய்வமாக மாறி காட்சி அளிக்கின்றார்
      இப்பதிவிற்காக
      வெட்டுடைய காளியம்மன் கோயில் புகைப்படம் ஒன்றினையும் சேகரித்து வைத்துள்ளேன் நண்பரே
      நன்றி

      நீக்கு
    2. ஆகா ... பயணம் செய்து படம் பிடித்தீர் போல...

      நீக்கு
    3. பயணம் செய்யவில்லை நண்பரே
      இணையத்தில் இருந்து எடுத்து வைத்துள்ளேன்

      நீக்கு
  24. வியக்கவைத்து வேதனைப்பட வைக்கும் நிகழ்வுகள்! அரிய தகவல்கள்! தொடர்கிறேன்! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  25. சுதந்திரத்திற்காக இத்தனை பேர் உயிரைக் கொடுத்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது ,ஆனால் இன்று சாதாரண மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடிய வில்லை என்பது முள்ளாய் குத்துகிறதே !
    த ம +1

    பதிலளிநீக்கு
  26. அய்யா,

    ஒவ்வொரு பதிவிலும் தெரியும் உங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  27. செய் நன்றிக்காக உயிரையே விடத் துணிந்த உடையாளின் மாண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. வேலுநாச்சியார் ராமானுஜம் தொடர் போல மிக சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை

    பதிலளிநீக்கு
  28. நன்றி நண்பரே
    வலைப்பக்கத்தில் இணைத்துள்ளேன்

    பதிலளிநீக்கு
  29. விறுவிறுப்பாக செல்லும் வீர் காவிய படைப்பு
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  30. அற்புதமாக செல்கிறது தொடர்...

    பதிலளிநீக்கு
  31. வணக்கம்
    ஐயா.

    படிக்க படிக்க திகட்டவில்லை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் தொடருங்கள் அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்
    த.ம 14
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  32. இன்றும் வெட்டுடையாள் கோவிலில் வேலுநாச்சியாரின் திருமாங்கல்யம் உள்ளது...சகோ

    பதிலளிநீக்கு
  33. உடையாளின் தியாகம் எத்துனை பெரிது பாருங்கள். வாருங்கள் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  34. உடலை இழந்து தனியாகக் கிடந்த உடையாளின் முகத்தில் ஓர் அமைதி -ஓர் ஆனந்தம்- ஓர் நிறைவு ...என என் நெஞ்சை நெகிழ வைத்து விட்டீர்கள் ...............உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு