விஜயதசமி. இரவு நேரம்.
சிவகங்கை..
தீ பந்தங்களின் ஒளியில் இராஜராஜேசுவரி அம்மன்
கோயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.
அப்பொழுதுதான் கோயிலுக்கு அருகில் வந்த, அந்தப்
பெண், இரு கைகளாலும் கூட்டத்தைப் பிளந்து கொணடு முன்னேறுகிறார்.
சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள். மகிழ்வைச்
சுமந்த உதடுகள்.
உடலைச் சுற்றி இறுகப் பற்றியிருக்கும் புடவைக்குள்,
ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
சாதாரணப்
பார்வைக்குப் புலப்படாத வகையில், அப்பெண்ணின் புடவைக்குள் ஓய்வெடுக்கிறது, ஓர் வாள்.







.jpg)
