கரந்தை.
     மாலை 5.30 மணி
     24.12.2017 ஞாயிற்றுக் கிழமை
     மூன்று சக்கர வாகனம் ஒன்று, கரந்தைத் தமிழ்ச்
சங்க வளாகத்திற்குள் நுழைந்து, தமிழ்ப்பெரு மன்றத்திற்கு அருகில் வந்து நிற்கிறது.
     வாகனத்தில் இருந்து முதலில், ஒரு ஊன்று கோல்
வெளிவருகிறது. ஊன்று கோலைப் பற்றியவாறு, 80 வயதினையும் கடந்துவிட்ட ஒரு மூதாட்டி, மெல்ல
இறங்குகிறார்.





























